மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலை

Added : பிப் 05, 2023 | |
Advertisement
சென்னை,-'இன்று முதல் மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் அறிவிப்பு:தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று முதல் 7ம் தேதி வரை, வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 8ம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை
three days, dry weather, வறண்ட வானிலை

சென்னை,-'இன்று முதல் மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் அறிவிப்பு:

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று முதல் 7ம் தேதி வரை, வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 8ம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில், 10 செ.மீ., மழை பதிவானது.

அதற்கு அடுத்தபடியாக, மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் பகுதியில் 7; நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, திருநெல்வேலி மாவட்டம் ஊத்துமலை பகுதியில் தலா 6 செ.மீ., மழை பதிவானது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X