சிப்பிப்பாறை, ராஜபாளையம் நாய்களை பாதுகாக்க நிதி!

Updated : பிப் 05, 2023 | Added : பிப் 05, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை: ''நாட்டின நாய்களான சிப்பிப்பாறை, கன்னி, ராஜபாளையம் ஆகிய இனங்களை பாதுகாக்க, அரசு நிதி ஒதுக்கியுள்ளது,'' என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணை வேந்தர் செல்வகுமார் தெரிவித்தார்.சென்னை கால்நடை மருத்துவ கல்லுாரியில், கால்நடை சிகிச்சை முறையை உலக தரத்திற்கு உயர்த்துவதற்கான, தேசிய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கம் நேற்று துவங்கியது.சிறப்பான

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: ''நாட்டின நாய்களான சிப்பிப்பாறை, கன்னி, ராஜபாளையம் ஆகிய இனங்களை பாதுகாக்க, அரசு நிதி ஒதுக்கியுள்ளது,'' என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணை வேந்தர் செல்வகுமார் தெரிவித்தார்.

சென்னை கால்நடை மருத்துவ கல்லுாரியில், கால்நடை சிகிச்சை முறையை உலக தரத்திற்கு உயர்த்துவதற்கான, தேசிய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கம் நேற்று துவங்கியது.
சிறப்பான சிகிச்சை முறையை கையாண்ட மருத்துவர்களுக்கு, துணை வேந்தர் செல்வகுமார்,பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.



latest tamil news



பின், துணை வேந்தர் பேசியதாவது:
களப் பணியாற்றும் கால்நடை மருத்துவர்களின் பங்கு, கிராமப்புற ஏழை விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதுபோன்ற கருத்தரங்குகள் களப் பணியாற்றும் கால்நடை மருத்துவர்களின் செயல் திறனை மேம்படுத்தும். நாட்டின மாடுகளான காங்கேயம், பர்கூர், உம்பலாச்சாரி, ஆலம்பாடி ஆகிய இனங்களை பாதுகாக்க, அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. அதேபோல், நாட்டின நாய்களான சிப்பிப்பாறை, கன்னி, ராஜபாளையம் போன்ற இனங்களையும் பாதுகாக்க, நிதி ஒதுக்கி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

பஞ்சாப் மாநில குரு அங்கட்தேவ் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணை வேந்தர் இந்திரஜித் சிங், சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லுாரி முதல்வர் கருணாகரன், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் சிகிச்சையியல் இயக்குனர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

09-பிப்-202300:40:54 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் பீகார்ல நாய்களுக்கும் ஆதார் கிடைக்குது போலிருக்கே .... இவங்களுக்கு எப்போ ?
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
05-பிப்-202313:38:49 IST Report Abuse
N Annamalai மிக அவசியம் .பாராட்ட படவேண்டியது
Rate this:
Cancel
Krishna - Chennai ,இந்தியா
05-பிப்-202309:04:41 IST Report Abuse
Krishna ரொம்ப முக்கியம். நாய்களால் மனிதர்கள் படும் துன்பங்கள் சொல்லி மாளாது. இங்கு மனிதர்களை விட இவர்களுக்கு நாய்கள் தான் முக்கியம்
Rate this:
Pandi Muni - Johur,மலேஷியா
05-பிப்-202313:15:03 IST Report Abuse
Pandi Muniநாய்கள் முக்கியமே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X