பத்திரங்கள் ரத்து அதிகாரம்; எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

Updated : பிப் 05, 2023 | Added : பிப் 05, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை : ஆவணங்களை ரத்து செய்ய, மாவட்டப் பதிவாளருக்கு அதிகாரம் வழங்கிய சட்ட திருத்தத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதில் அளிக்க, அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, அடையாறைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தாக்கல் செய்த மனு:குன்றத்துார் தாலுகா, ஆதனுார் கிராமத்தில், எங்கள் குடும்பத்துக்கு
செட்டில்மென்ட், மாவட்டப் பதிவாளர், நோட்டீஸ்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சென்னை : ஆவணங்களை ரத்து செய்ய, மாவட்டப் பதிவாளருக்கு அதிகாரம் வழங்கிய சட்ட திருத்தத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதில் அளிக்க, அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை, அடையாறைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தாக்கல் செய்த மனு:


குன்றத்துார் தாலுகா, ஆதனுார் கிராமத்தில், எங்கள் குடும்பத்துக்கு சொந்தமாக சொத்துக்கள் உள்ளன. என் தந்தைக்கு உரிய சொத்தின் பங்கை, எனக்கு 'செட்டில்மென்ட்' வாயிலாக எழுதி வைத்தார். இதை ரத்து செய்யும்படி, விட்டல் என்பவர் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, மாவட்டப் பதிவாளர், எனக்கு 'நோட்டீஸ்' அனுப்பினார்.

எட்டு ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை ரத்து செய்யும் முயற்சியாக, இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


latest tamil news


போலி ஆவணங்களை ரத்து செய்ய, பதிவாளருக்கு அதிகாரம் வழங்கி, 2022ல் சட்டத் திருத்தம் வந்தது. சொத்து உரிமை குறித்து, மாவட்டப் பதிவாளர் முடிவு செய்ய முடியாது. அதற்கு, அவர் தகுதியானவர் அல்ல. இந்த சட்டத் திருத்தம் தன்னிச்சையானது; அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது.

எனவே, மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் வழங்கிய சட்டத் திருத்தத்தை, ரத்து செய்ய வேண்டும். மாவட்டப் பதிவாளர் அனுப்பிய நோட்டீஸ் தொடர்பான நடவடிக்கைக்கு, தடை விதிக்க வேண்டும்.


இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


மனு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கே.சக்திவேல் ஆஜரானார். மனுவுக்கு, இரண்டு வாரங்களில் பதில் அளிக்க, அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

05-பிப்-202312:55:53 IST Report Abuse
ராஜா அந்த பாத்திரம் போலியானதா இல்லையா என்று கூட அதை பதிவு செய்யும் பதிவாளர்கள் முதலில் அந்த வேலைக்கே தகுதி இல்லாத நபர்கள்.
Rate this:
Cancel
Ramesh - chennai,இந்தியா
05-பிப்-202311:50:26 IST Report Abuse
Ramesh Corrupt govt,corrupt govt servants,greedy persons, Our public want ill-politicians to rule. People's intensional foolishness affects the rest innocent people. Democracy for foolish people is worse than rogue dictator
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
05-பிப்-202309:20:18 IST Report Abuse
Kasimani Baskaran பதிவு செய்யும் பொழுது ஒரு ஆவணத்தை சரி பார்த்து பதிவு செய்ய வேண்டும். அதை விட்டு விட்டால் அதன் பின்னர் காமடிதான் செய்ய முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X