பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் காலமானார்

Updated : பிப் 05, 2023 | Added : பிப் 05, 2023 | கருத்துகள் (11) | |
Advertisement
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது (79)பாகிஸ்தானின் ராணுவ தளபதியாக இருந்த முஷாரப், ராணுவ நடவடிக்கை வாயிலாக 1999ல் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றினார். 2009 வரை பாக்., அதிபராக பதவி வகித்துவந்தார். இந்தியா - பாக்., இடையிலான கார்கில் போருக்கு முஷாரப் தான் காரணியாக இருந்தார். 2016 முதல்
Musharraf, pakistan, president, ParvezMusharraf,  முஷாரப், பர்வேஸ் முஷாரப், பாகிஸ்தான், அதிபர்,

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது (79)


பாகிஸ்தானின் ராணுவ தளபதியாக இருந்த முஷாரப், ராணுவ நடவடிக்கை வாயிலாக 1999ல் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றினார். 2009 வரை பாக்., அதிபராக பதவி வகித்துவந்தார். இந்தியா - பாக்., இடையிலான கார்கில் போருக்கு முஷாரப் தான் காரணியாக இருந்தார். 2016 முதல் ஐக்கிய அரபு எமீரேட்சின் துபாயில் வசித்து வந்தார்.


latest tamil news


கடந்த சில மாதங்களாக துபாயில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் முஷாரப் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று(பிப்.,05) அவர் காலமானார்.




இந்தியாவில் பிறந்தவர்


நாடு பிரிவினைக்கு முன்னர், இந்திய தலைநகர் டில்லியில் பிறந்தவர் முஷாரப். பிரிவினைக்கு பிறகு, குடும்பத்தினருடன் கராச்சிக்கு அவர் இடம்பெயர்ந்தார்.



latest tamil news


துபாயில் தஞ்சம்


முஷாரப், பாக்., முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். அவர் மீது, 2007ல் பாக்., அரசியல் சாசன சட்டத்தை ரத்து செய்த வழக்கும் உள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக, 2016ல் துபாய் சென்றவர், அதன் பின் பாக்., திரும்பவில்லை.




இரங்கல்


முஷாரப் மறைவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர், காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

05-பிப்-202321:58:24 IST Report Abuse
ராமகிருஷ்ணன் நம்ம கள்ள நோட்டு களவாணி இரங்கல் தெரிவித்துள்ளாரா.
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
05-பிப்-202321:49:52 IST Report Abuse
Suppan இவனை இந்திரன் சந்திரன் என்று காங்கிரசும் அப்துல்லாவும் புகழ்கிறார்கள். தேசத் துரோகிகள்
Rate this:
Cancel
Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா
05-பிப்-202319:55:32 IST Report Abuse
Gokul Krishnan என்ன ஆட்டம் ஆடினாலும் இது தான் எல்லோர்க்கும் முடிவு ஆனால் வாழும் காலத்தில் சண்டை பதவி வெறி ஆணவம் இதை தான் மனித மனம் விரும்புகிறது முடிந்தவரை அமைதி ஒற்றுமையுடன் வாழ மனித மனம் ஏனோ எண்ணுவது இல்லை
Rate this:
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
05-பிப்-202321:47:08 IST Report Abuse
MARUTHU PANDIARகுறிப்பாக அவனுவ எண்ணுவதே கிடையாது+++++அவனுவ சித்தாந்தமே வேற, ரொம்ப வித்தியாசம் -பூமியிலேயே தனி....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X