கூட்ட நெரிசலில் 4 பேர் பலி: பொங்கலுக்கு வேட்டி சேலை வழங்காததே காரணம்: பழனிசாமி

Added : பிப் 05, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை: எதிர்கட்சி தலைவர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஒரு தனியார் இலவச சேலை வழங்கும் நிகழ்ச்சியில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய வயது முதிர்ந்த 4 மகளிர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும்
 கூட்ட நெரிசலில் 4 பேர் பலி: பொங்கலுக்கு வேட்டி சேலை வழங்காததே காரணம்: பழனிசாமி

சென்னை: எதிர்கட்சி தலைவர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஒரு தனியார் இலவச சேலை வழங்கும் நிகழ்ச்சியில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய வயது முதிர்ந்த 4 மகளிர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், மரணமடைந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவதற்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் இந்த அரசு செய்து தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இந்த ஆண்டு தைப்பொங்கல் திருநாளுக்கு அரசின் விலையில்லா வேட்டி, சேலையினை வழங்கி இருந்தால், இந்த தனியார் வழங்கும் இலவச சேலையினை வாங்க ஒரே சமயத்தில் சுமார் 1500 ஏழை மகளிர் குழுமியிருக்க மாட்டார்கள். கூட்ட நெரிசல் காரணமாக அப்பாவி ஏழை மகளிர் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கவும் மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (4)

Sureshkumar - Coimbatore,இந்தியா
06-பிப்-202311:42:31 IST Report Abuse
Sureshkumar சரியாகத்தான் திரு. பழனிசாமி அவர்கள் கூறியுள்ளார், விடியாத அரசு பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை அளித்திருந்தால் ஒருவேளை இவளவு கூட்டம் கூடியிருக்காது, மரண சம்பவம் நிகழ்ந்துஇருக்காது, விடியாத அரசு தன குடும்பத்தாரும் அமைச்சர்களும் சம்பாதிப்பதையே முழு நேரமும் சிந்திக்கிற வேளையில் சற்று மக்களை பற்றி சிந்தித்தால் நலம்,
Rate this:
Cancel
Sureshkumar - Coimbatore,இந்தியா
06-பிப்-202311:38:43 IST Report Abuse
Sureshkumar சரியாக than
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
05-பிப்-202321:23:26 IST Report Abuse
g.s,rajan சூப்பர் கண்டுபிடிப்பு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X