வேளாண் ஸ்டார்ட்அப்களை ஊக்குவிக்க நிதி: பிரிட்டன் நிறுவனம் பாராட்டு

Updated : பிப் 05, 2023 | Added : பிப் 05, 2023 | கருத்துகள் (7) | |
Advertisement
2023 - 24 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை சமர்ப்பித்த போது, கிராமப்புறங்களில் இளம் தொழில் முனைவோர்களால் விவசாயம் சார்ந்த ஸ்டார்ட்அப் தொடங்கப்படுவதை ஊக்குவிக்க வேளாண் ஊக்குவிப்பு நிதி அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.இந்த வேளாண் ஊக்குவிப்பு நிதியை உருவாக்குவதன் மூலம் அக்ரி ஸ்டார்ட்அப்களுக்கு ஆதரவளிப்பது மற்றும் வேளாண் கடன் இலக்கை
AgriAcceleratorFund, AgriStartup, ஸ்டார்ட்அப்

2023 - 24 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை சமர்ப்பித்த போது, கிராமப்புறங்களில் இளம் தொழில் முனைவோர்களால் விவசாயம் சார்ந்த ஸ்டார்ட்அப் தொடங்கப்படுவதை ஊக்குவிக்க வேளாண் ஊக்குவிப்பு நிதி அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இந்த வேளாண் ஊக்குவிப்பு நிதியை உருவாக்குவதன் மூலம் அக்ரி ஸ்டார்ட்அப்களுக்கு ஆதரவளிப்பது மற்றும் வேளாண் கடன் இலக்கை ரூ.2 லட்சம் கோடியாக அதிகரிப்பது, வேளாண் தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பது ஆகியவை இத்துறையில் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் உதவும் என்று இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான குளோபல் டேட்டா தெரிவித்துள்ளது.


latest tamil news

குளோபல் டேட்டா மதிப்பீட்டின்படி, 2022ல் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் மொத்த மதிப்பு கூட்டலில் 18.4% பங்களித்தன மேலும் மொத்த பணியாளர்களில் 44.8% பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. விவசாயத் துறை வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தியில் ஒரு முக்கிய பங்களிப்பாளராக இருப்பதால் பட்ஜெட்டில் தேவையானதைப் பெற்றுள்ளது. 2023 - 25ல் இந்தியாவின் விவசாயம் மற்றும் அது தொடர்புடைய துறைகளின் மொத்த மதிப்பு கூட்டல் அளவானது 10.2% உயரக்கூடும்.

நூறு கோடி டாலர் சந்தை மதிப்பு கொண்ட ஸ்டார்ட்அப்களை யூனிகார்ன் என்பார்கள். இந்தியாவில் வேளாண் தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட்அப்களில் மட்டுமே இன்னும் எந்த ஒரு நிறுவனமும் யூனிகார்ன் அந்தஸ்தை பெறாமல் உள்ளது. தற்போது அத்துறையில் அரசின் கவனம் திரும்பியுள்ளது. விவசாயத்தை நிலையானதாக மாற்றுவது மட்டுமல்லாமல், கோடிக்கணக்கான மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை வழங்குவதற்கும் புதுமையான ஸ்டார்ட்அப்கள் செயல்படும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

புதியதாக உருவாக்கப்பட்டுள்ள வேளாண் ஊக்குவிப்பு நிதி குறித்து, அஜிலிட்டி வென்ச்சர்ஸின் இணை நிறுவனர் தியானு தாஸ் “விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆரோக்கியமான உணவு உற்பத்தி செய்ய தேவையான தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், ஆராய்ச்சிக்கும் மத்திய அரசின் இந்த நிதி உதவும். தோட்டக்கலை, மாற்று புரதங்கள், மீன் வளர்ப்பு மற்றும் உணவுக் கழிவுகளைக் குறைத்தல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற ஸ்டார்ட்அப்களை உருவாக்க முடியும்” என கூறியுள்ளார்.


latest tamil news

ஹெசா எனும் வேளாண் நிதி சார்ந்த ஸ்டார்ட்அப்பை நடத்தி வரும் வம்சி உதயகிரி, “நவீன தொழில்நுட்பங்களுடன் புதுமையான, மலிவான தீர்வுகளை கொண்டு வருவதன் மூலம் விவசாய உற்பத்தி அதிகரிக்கும். இது நீண்ட கால பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானது. நாட்டின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். அப்போது இந்த நிதி அதிக மதிப்பை பெறும்.” என தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

06-பிப்-202309:18:27 IST Report Abuse
ஆரூர் ரங் விவசாயத்தில் ட்ராக்டர் பயன்பாட்டை கம்யூனிஸ்டுகள் கடுமையாக எதிர்த்து போராட்டம் நடத்திய போது திமுக அவர்களுடன் கூட்டணி வைத்தது வரலாறு. கிராமத்து ஏழைகள் முன்னேறவே😪 கூடாது என்பதில் எப்போதுமே மும்முரம்.
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
06-பிப்-202303:41:57 IST Report Abuse
Priyan Vadanad ஹிண்டபார்க்கின் நெத்தியடிக்கு மருந்து குளோபல் டேட்டா. கொஞ்சம் காயம் ஆறும்.
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
06-பிப்-202303:38:44 IST Report Abuse
Priyan Vadanad இந்த வேளாண் ஊக்குவிப்பு மீதியை தனியர் அத்தாணி வசம் ஒப்படைத்தால் அவருக்கு இந்த நெருக்கடி நேரத்தில் மிகவும் உதவியாக இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X