Adani issue will not affect the countrys economy: Nirmala | அதானி விவகாரத்தால் நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பில்லை : நிர்மலா சீதாராமன்| Dinamalar

அதானி விவகாரத்தால் நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பில்லை : நிர்மலா சீதாராமன்

Updated : பிப் 05, 2023 | Added : பிப் 05, 2023 | கருத்துகள் (18) | |
புதுடில்லி: அதானியின் பங்குசந்தை விவகாரத்தால் நாட்டின் பொருளாதாரத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படபோவதில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டின் பொருளாதார கொள்கை மற்றும் பொருளாதார சூழ்நிலை வலுவாக இருந்து வருகிறது. அவற்றிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அதானி விவகாரம் குறித்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: அதானியின் பங்குசந்தை விவகாரத்தால் நாட்டின் பொருளாதாரத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படபோவதில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.



latest tamil news


இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டின் பொருளாதார கொள்கை மற்றும் பொருளாதார சூழ்நிலை வலுவாக இருந்து வருகிறது. அவற்றிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அதானி விவகாரம் குறித்து செபி மற்றும் ஆர்.பி.ஐ., விசாரிக்கும் . பங்கு சந்தையில் நிலைத்தன்மையை உருவாக்க வேண்டிய பொறுப்பு செபிக்கே இருக்கிறது. பங்கு சந்தையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுவது இயல்பானது தான்.


latest tamil news


கடந்த நாட்களில் சுமார் 800 கோடி அமெரிக்க டாலர் அந்நியச்செலாவணி நம் நாட்டிற்கு கிடைத்துள்ளது. இவை இந்தியாவின் பொருளாதார வலிமையை நம்பிக்கையூட்டுவதாக உள்ளது.இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X