லஞ்சம் வாங்கிய பெண் வக்கீல் கைது

Added : பிப் 05, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
தாவணகரே,-'போக்சோ' வழக்கை முடித்து வைப்பதாக கூறி, லஞ்சம் வாங்கிய பெண் வக்கீல் கைது செய்யப்பட்டார்.தாவணகரே டவுன் பி.ஜே., பார்க் பகுதியில், வசித்து வருபவர் மதன். இவர் 'போக்சோ' வழக்கில் கைதாகி, தற்போது ஜாமினில் வெளியே உள்ளார். அவர் மீதான வழக்கு தாவணகரே நீதிமன்றத்தில் நடந்தது.இந்நிலையில் மதனுக்கு, அரசு சிறப்பு வக்கீலான ரேகா கோட்ரேகவுடா, 45, என்பவரின் பழக்கம் கிடைத்தது.
 லஞ்சம் வாங்கிய  பெண் வக்கீல் கைது



தாவணகரே,-'போக்சோ' வழக்கை முடித்து வைப்பதாக கூறி, லஞ்சம் வாங்கிய பெண் வக்கீல் கைது செய்யப்பட்டார்.

தாவணகரே டவுன் பி.ஜே., பார்க் பகுதியில், வசித்து வருபவர் மதன். இவர் 'போக்சோ' வழக்கில் கைதாகி, தற்போது ஜாமினில் வெளியே உள்ளார். அவர் மீதான வழக்கு தாவணகரே நீதிமன்றத்தில் நடந்தது.

இந்நிலையில் மதனுக்கு, அரசு சிறப்பு வக்கீலான ரேகா கோட்ரேகவுடா, 45, என்பவரின் பழக்கம் கிடைத்தது. மதனிடம், 'உங்கள் மீது பதிவான போக்சோ வழக்கை, நான் முடித்து வைக்கிறேன். இதற்கு 3 லட்சம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும்' என்று கேட்டார்.

ஒப்புகொண்ட மதன், முதல் தவணையாக 1.13 லட்சம் ரூபாய் கொடுத்தார். ஆனால் மேற்கொண்டு லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், ரேகா மீது தாவணகரே லோக் ஆயுக்தா போலீசில் புகார் செய்தார். அப்போது அவருக்கு சில அறிவுரைகள் வழங்கிய போலீசார், ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.

இந்நிலையில் நேற்று ரேகாவை அவரது அலுவலகத்தில் சந்தித்த மதன், மீதம் கொடுக்க வேண்டிய 1.87 லட்சம் ரூபாயை கொடுத்தார். அதை ரேகா வாங்கினார். அங்கு வந்த லோக் ஆயுக்தா போலீசார், ரேகாவை கைது செய்தனர்.

அவரிடம் இருந்த 1.87 லட்சம் ரூபாய், வெற்று காசோலையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

vijay - coimbatore,இந்தியா
08-பிப்-202308:40:32 IST Report Abuse
vijay முதல்ல லஞ்சம் கொடுக்க ஒப்புக்கொண்டு கொடுத்த குற்றவாளி, மேற்கொண்டு கொடுக்க விரும்பவில்லையாம். முதலில் லஞ்சம் கேட்டபோதே லோக் ஆயுக்தா சென்று இருந்தால், நியாயம். 1.13 லட்சம் கொடுத்தபிறகு மீதி செலவு செய்ய அவனுக்கு விருப்பம் இல்லை அப்படித்தானே. முதலில் லஞ்சம் கொடுத்து தப்பிக்க நினைத்த அந்த போக்ஸோ குற்றவாளியை மீண்டும் கைது செஞ்சிருக்கவேண்டும்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
08-பிப்-202306:05:06 IST Report Abuse
D.Ambujavalli ல . ஓ . துறையினர் ரூபாய் நோட்டுகளைக்கொடுத்துப் பிடித்தபின் வேற்று செக் எங்கு வந்தது? இந்தமாதிரி கேஸ்களில் தவணை முறையில் கொடுத்தால், வந்ததை வாங்கிப் போட்டுக்கொண்டு கமுக்கமாகப போகாமல் மேற்கொண்டு எதிர்பார்த்தால் எதோ உள்ளடி வேலை நடக்கிறது என்று அர்த்தம். இதை ஊகிக்க முடியவில்லையா வக்கீல் அம்மாவுக்கு ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X