திருவள்ளூர்,-திருவள்ளூர், பூங்கா நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் திவாகர், 32. இவருக்கும், இவரது மனைவிக்கும், கடந்த 30ம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. அன்றிரவு வீட்டை விட்டு வெளியில் சென்றவர், இதுவரை வீடு திரும்பவில்லை.
உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்காததால், அவரது மனைவி பிளஸ்ஸி, நேற்று முன்தினம் திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து, காணாமல் போனவரை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement