'வந்தே மெட்ரோ ரயில்' சேவை: மத்திய அரசின் அடுத்த திட்டம்

Updated : பிப் 06, 2023 | Added : பிப் 05, 2023 | கருத்துகள் (11) | |
Advertisement
ஹைதராபாத்-'வந்தே பாரத்' ரயில்களுக்கு அடுத்தபடியாக, இரண்டு பெரிய நகரங்களை இணைக்கும், 'வந்தே மெட்ரோ' ரயில்களை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். வரவேற்புநாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் அதிவிரைவு ரயில்கள் பயணியரிடையே பெரும் வரவேற்பைப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஹைதராபாத்-'வந்தே பாரத்' ரயில்களுக்கு அடுத்தபடியாக, இரண்டு பெரிய நகரங்களை இணைக்கும், 'வந்தே மெட்ரோ' ரயில்களை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.



latest tamil news




வரவேற்பு



நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் அதிவிரைவு ரயில்கள் பயணியரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

டில்லி -- வாரணாசி, காந்திநகர் - -- மும்பை, சென்னை - -மைசூரு உள்ளிட்ட வழித்தடங்களில் இதுவரை எட்டு ரயில்கள் இயக்கப்பட்டுள்ள நிலையில், 9 மற்றும் 10வது ரயில்களை பிரதமர் மோடி, வரும் 10ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளார்.

இந்நிலையில், வந்தே பாரத் ரயில்களுக்கு நிகராக, வந்தே மெட்ரோ ரயில் சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.


வலியுறுத்தல்



இது குறித்து ஹைதராபாதில் அவர் கூறியதாவது:

வந்தே பாரத் ரயில்கள் பெரும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, அதிவிரைவு வந்தே மெட்ரோ ரயில்களை அறிமுகப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி, ரயில்வே அமைச்சகத்திடம் கேட்டுக்கொண்டார்.


latest tamil news


உலகத் தரம் வாய்ந்த, பிராந்தியங்களுக்கு இடையிலான ரயில்களாக இவை உருவாக வேண்டும் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இதற்காக இந்த ஆண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அடுத்த 12 முதல் 16 வாரங்களில், வந்தே மெட்ரோ ரயில்களுக்கான முன்மாதிரியை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

அதற்கடுத்த ஒரு ஆண்டுக்கு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, புதிய ரயில்கள் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும்.

இந்த ரயில்கள் 100 கி.மீ., இடையில் அமைந்துள்ள நகரங்களுக்கு இடையே இயக்கப்படுவதால், உள்ளூர் பயணியருக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
06-பிப்-202313:08:12 IST Report Abuse
தமிழ்வேள் மித தூர எக்ஸ்பிரஸ் மற்றும் குறைந்த தூர பாசஞ்சர் சேவைகள் மட்டுமே தற்போதைய தேவை.. சொகுசு கும்பல், கம்பெனி பணத்தில் பிழைப்பை ஓட்டுவதற்கு எதற்கு இந்த ரயில்கள் ?
Rate this:
Cancel
06-பிப்-202311:21:04 IST Report Abuse
அப்புசாமி சரிதான்... வந்தே ரயில். அடுத்து வந்தே விமாபம். வந்தே சொகுசு கப்பல். வந்தே அரிசி. வந்தே ரேஷன். வந்தே கோதுமை. வந்தே கார், பஸ்சுனு உட்டு அசத்துங்க.
Rate this:
Cancel
Arul Narayanan - Hyderabad,இந்தியா
06-பிப்-202309:37:10 IST Report Abuse
Arul Narayanan வந்தே பாரத் என்றால் பாரதத்திற்கு வணக்கம் என்று பொருள். அப்படியானால் மெட்ரோவுக்கு வணக்கம் என்று பொருளாகுமே. பாரதமும் மெட்ரோவும் ஒன்றா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X