'4 பெண்கள் பலி: அரசு தான் பொறுப்பு': பழனிசாமி

Updated : பிப் 06, 2023 | Added : பிப் 06, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை: 'இலவச சேலை வழங்கிய நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில், 4 பெண்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு தி.மு.க., அரசு பொறுப்பேற்க வேண்டும்' என, அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ளார். அவரது அறிக்கை:தி.மு.க., ஆட்சியின் நிர்வாகத் திறமை இன்மையால், வயது முதிர்ந்த, நான்கு பெண்கள், பரிதாபமாக தங்கள் இன்னுயிரை இழந்த துயர நிகழ்ச்சி, வாணியம்பாடியில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: 'இலவச சேலை வழங்கிய நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில், 4 பெண்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு தி.மு.க., அரசு பொறுப்பேற்க வேண்டும்' என, அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ளார்.



latest tamil news


அவரது அறிக்கை:

தி.மு.க., ஆட்சியின் நிர்வாகத் திறமை இன்மையால், வயது முதிர்ந்த, நான்கு பெண்கள், பரிதாபமாக தங்கள் இன்னுயிரை இழந்த துயர நிகழ்ச்சி, வாணியம்பாடியில் நிகழ்ந்துள்ளது.

இந்த ஆண்டு பொங்கல் விழாவுக்கு, அரசின் இலவச வேட்டி - சேலையை வழங்கி இருந்தால், தனியார் வழங்கும் இலவச சேலையை வாங்க, ஒரே நேரத்தில், 1,500 பெண்கள் குழுமியிருக்க வாய்ப்பில்லை.

கூட்ட நெரிசல் காரணமாக, ஏழை பெண்கள், தங்கள் இன்னுயிரை இழந்திருக்க மாட்டார்கள். நடந்தேறிய இந்த துன்ப நிகழ்வுக்கு காரணமான அதிகாரிகள் மீதும், இந்நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீதும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


latest tamil news


உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கான நிவாரண தொகையை, 10 லட்சம் ரூபாயாக அரசு உயர்த்தி வழங்க வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு, 1 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.

குறித்த காலத்தில் இலவச வேட்டி, சேலையை வழங்காத தி.மு.க., அரசு, இந்த நிகழ்வுக்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

06-பிப்-202305:39:27 IST Report Abuse
அப்புசாமி ஏழைகளை இலவசங்களுக்கு அடிமையாக்கி வெச்சு ஓட்டு பொருக்கும் ரெண்டு கழகங்கள் கூட்டுப் பொறுப்பேற்க வேண்டும்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
06-பிப்-202304:40:08 IST Report Abuse
Kasimani Baskaran சொந்த உழைப்பில் ஒரு சேலை கூட வாங்க முடியாத தமிழன்... அடுத்த பக்கம் திராவிடனை மட்டும் முன்னேற்றுகிறேன் பேர்வளி என்று தமிழகத்தை சுரண்டும் திராவிட வந்தேறிகள்...
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-பிப்-202302:41:30 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் 13 பேரை தலை சிதற குறி வைத்து ஸ்னைப்பர் துப்பாக்கியால் சுட்டால், டிவியில் பார்த்து தெரிஞ்சுக்குவாரு. அது அரசின் தப்பே இல்லை என்பது போல இதையும் விட்டுவிட முடியாது. நிர்வாகத்தின் தவறை கண்டறிந்து சம்பந்தப்பட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். டோக்கனை கொடுத்து குறிப்பிட்ட நாளில் வரவேண்டும் என்பதை செய்யும் வென்றுகள் அப்பவே பொருளையும் கொடுத்து விடலாமே, ஏன் அப்படி செய்யிறதில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X