பொய்யர்களில் மகா பொய்யர் நீங்கள்!

Updated : பிப் 06, 2023 | Added : பிப் 06, 2023 | கருத்துகள் (60) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்...... ஆர்.தையல்நாயகி, நாகர்கோவிலில் இருந்து அனுப்பிய, 'இ- - மெயில்' கடிதம்: 'தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் எதையும் அளிக்காத மத்திய பட்ஜெட், மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது' என விமர்சனம் செய்துள்ளார், முதல்வர் ஸ்டாலின். மத்திய பட்ஜெட் ஒரு பக்கம் இருக்கட்டும்... தி.மு.க.,வின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_up


உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்......


ஆர்.தையல்நாயகி, நாகர்கோவிலில் இருந்து அனுப்பிய, 'இ- - மெயில்' கடிதம்:

'தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் எதையும் அளிக்காத மத்திய பட்ஜெட், மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது' என விமர்சனம் செய்துள்ளார், முதல்வர் ஸ்டாலின். மத்திய பட்ஜெட் ஒரு பக்கம் இருக்கட்டும்... தி.மு.க.,வின் வாக்குறுதிகளை நம்பி ஓட்டுப்போட்டு, மக்கள் ஏமாந்தது என்னென்ன என்ற பட்டியலை தருகிறேன்... 'விடியல் ஆட்சி' தருவதாக சொன்ன நீங்கள், இனியாவது அவற்றை கவனிப்பீர்களா என்று பார்ப்போம், முதல்வர் அவர்களே...



latest tamil news


 குடும்ப தலைவியருக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமைத் தொகை தரப்படும் என்றீர்களே... அது கிடைக்காத ஏமாற்றத்தில் மக்கள் உள்ளனரே, அதற்கு உங்களின் பதில் என்ன?

 'விதவையர் மாநாடு நடத்தி, மதுவை அறவே ஒழிப்போம்' என்றார், உங்களின் அருமைத் தங்கை கனிமொழி. தற்போது, 'தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில், மது விலக்கு பற்றி சொல்லவே இல்லை' என, 'அந்தர்பல்டி' அடிக்கிறார். இதைவிடவா, மக்களுக்கு ஏமாற்றம் தந்துள்ளது மத்திய பட்ஜெட்!

 கரூர் கம்பெனியின் அதிபரான செந்தில் பாலாஜி, அ.தி.மு.க.,வில் இருந்த போது, 'அவரின் ஊழலை வெளிக்கொண்டு வருவேன்' என்று சூளுரைத்தீர்கள். இப்போது, அதே பாலாஜி உங்கள் கட்சிக்கு வந்தவுடன், முப்பெரும் துறை கொடுத்து, அழகு பார்த்துள்ளீர்கள். இந்த அற்ப செயலை விடவா, மத்திய பட்ஜெட்டை பார்த்து மக்கள் ஏமாறப் போகின்றனர்.


latest tamil news


 ஒப்பந்த பணி ஒழிப்பு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல் என, 'உட்டாலக்கடி' தேர்தல் உறுதிமொழிகளை வாரி வழங்கிய நீங்கள், தற்போது அதை மறந்து, அமைச்சர் பெருமக்களின் புகழ்ச்சியில் மயங்கி கிடக்கிறீர்கள். உங்களின் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த அரசு ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு, மத்திய பட்ஜெட் ஏமாற்றம் ஒரு பொருட்டே இல்லை என்று கூறலாம்.

சட்டசபை தேர்தலுக்கு முன், மக்களின் காலில் விழாத குறையாக கெஞ்சி கூத்தாடி, ஆட்சியைப் பிடித்த நீங்கள் தான், மக்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளீர்கள். 'ஏமாற்றம் அளிக்கிறது' என்ற சொல்லின் அகராதியே, ஸ்டாலின் என்றாகி விட்டது. பொய்யர்களில் மகா பொய்யராக வலம் வரும் நீங்கள், 'உங்களுக்கு வந்தால் ரத்தம், அடுத்தவருக்கு வந்தால் தக்காளி சட்னி' என்ற ரீதியில், மத்திய பட்ஜெட்டை விமர்சிப்பது அபத்தமானது!

Advertisement




வாசகர் கருத்து (60)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
07-பிப்-202300:03:01 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பொறாமே? அப்படித்தானே? அப்படியே அந்த பைனஞ்சி லட்சம் எங்கே, வெளிநாட்டில் இருந்த கறுப்புப்பணமா இருக்கு, அதி கொண்டாந்து தருவேன்னு சொன்னதாவது ஞாபகம் இருக்கா. அப்டீன்னா அந்த கறுப்புப்பணம் எங்கே எங்கேன்னு கேட்கலாமே.
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
06-பிப்-202318:42:12 IST Report Abuse
M S RAGHUNATHAN அண்ணே அண்ணே ஸ்டாலின்.அண்ணே 1. மகளிருக்கு ₹1000/- என்னாச்சு 2. Gas மானியம்.Rs 100/- என்னாச்சு 3. கல்விக் கடன் ரத்து என்னாச்சு 4. 5 சவரன் நகைக் கடன் என்னாச்சு. 5. நீட் தேர்வு ரத்து என்னாச்சு. 6. 15 கோடி watch மருமகனுக்கு எப்படி வந்தது? அடுக்கிக் கொண்டே போகலாம். பொய்களின் மொத்த உருவம்.திமுக.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
06-பிப்-202316:09:42 IST Report Abuse
DVRR அது என்ன திமுக ஆய்வு செய்வது நானும் ஆய்வு செய்கின்றேன். சீர் திருத்த பள்ளியில் யாரை சேர்ப்பார்கள். கொலை கற்பழிப்பு ...இப்படி கொடுமையான குற்றம் செய்த சிறுவர்களை வழக்கு முடிந்த தீர்ப்பில் சீர் திருத்த பள்ளியில் சேர்ப்பார்கள். அவன் இறந்து விட்டானாம். இதற்கு காரணம் 6 அலுவலர்களாம். திருட்டு திராவிட மாடல் என்றால் குற்றவாளிகளுக்கு துணை போவது என்று மிக துல்லியமாக தெரிகின்றது இந்த செய்கையினால்.
Rate this:
DVRR - Kolkata,இந்தியா
06-பிப்-202317:58:51 IST Report Abuse
DVRRசிறுவர் சீர்திருத்த பள்ளியில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 7.5 லட்சம் ரூபாயும் முதல்-அமைச்சரின் நிவாரண நிதி+ ரூபாய் 2.5 லட்சம் ரூபாயும் என மொத்தம் 10 லட்சம் ரூபாய் வழங்கி ஆணையிட்டுள்ளார். சிறுவனின் தாயார் பிரியாவுக்கு தமிழ்நாடு நகரப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின், "அனைவருக்கும் வீடு" திட்டத்தின் கீழ். செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டம், அன்னை அஞ்சுகம் நகர் திட்டப்பகுதியில் தற்போது கட்டப்பட்டு முடிவுறும் நிலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஒரு குடியிருப்பினை ஒதுக்கீடு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளார்....
Rate this:
06-பிப்-202319:32:03 IST Report Abuse
subash human rights sure DMK ONLY SHOW MAGIC SHOW THATS ALL 21 MONTH COMPLETE NOTHING IMPROVEMENT ONLY DAILY ONE SCHEME ANNOUNCEMENT ALWAYS SPEAKING ABOUT DRAVIDA MODEL EXCEPT THAT DONT KNOW INCREASED ALL TAXES, MINISTER SPEACHES, BEHAVIOUR ON STAGES, IT SHOWS THAT HEADWAITS AFTER ALL IN TAMILNADU ONE CM CELL COMPLAINTS SO MANY PENDING IN DMK PERIOD WATCHED LAST ONE YEAR OFFICER HAVE NOT DARE ACTION TAKE AGAINST COMPLAINT U CANT SOLVE WHAT YOU WILL TEAR IN CENTRAL GOVERNMENT AFTER MP...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X