'அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பேனா சின்னத்திற்கு எதிர்ப்பு': தமிழக காங்., தலைவர் அழகிரி

Updated : பிப் 06, 2023 | Added : பிப் 06, 2023 | கருத்துகள் (59) | |
Advertisement
சென்னை: 'அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் தான், கருணாநிதி பேனா நினைவு சின்னத்தை எதிர்க்கின்றனர்' என, தமிழக காங்., தலைவர் அழகிரி கூறியுள்ளார். அவரது அறிக்கை:தன், 13 வயதில், அரசியலில் பிரவேசம் செய்து, 95 வயது வரை தமிழ் சமுதாயத்திற்காக அயராது உழைத்த கருணாநிதிக்கு, கடலுக்கு மத்தியில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. தம் பொது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: 'அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் தான், கருணாநிதி பேனா நினைவு சின்னத்தை எதிர்க்கின்றனர்' என, தமிழக காங்., தலைவர் அழகிரி கூறியுள்ளார்.



latest tamil news


அவரது அறிக்கை:



தன், 13 வயதில், அரசியலில் பிரவேசம் செய்து, 95 வயது வரை தமிழ் சமுதாயத்திற்காக அயராது உழைத்த கருணாநிதிக்கு, கடலுக்கு மத்தியில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.

தம் பொது வாழ்க்கையை, எழுத்து மற்றும் பேச்சை அடிப்படையாக வைத்து, ஐந்து முறை தமிழக முதல்வராக பதவி வகித்து, சமூகநீதிக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவர்.

கடற்கரை மணல் பரப்பில் இருந்து, 360 மீட்டர் தொலைவில், நடுக்கடலில் பேனா வடிவ நினைவு சின்னம் அமைப்பதால், சுற்றுச் சூழலுக்கு என்ன பாதிப்பு வந்து விடும் என, தெரியவில்லை.

தொழில் நுட்பக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு, கடற்கரை பகுதியில் ஆய்வு செய்து, அங்கு ஆமைகளோ, மீன்களோ இல்லை என, அறிக்கை வழங்கி இருக்கிறது.


latest tamil news


நாட்டில் உள்ள அனைத்து துறைமுகங்களும் கடலில் தான் இருக்கிறது. ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு, 10 கடல் மைல் தொலைவிற்கு, கடலில் தான் இருப்புப் பாதை அமைக்கப்பட்டது.

அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள், கருணாநிதியின் பேனா நினைவு சின்னத்தை விமர்சிக்கின்றனர். இத்தகைய விமர்சனங்களை வைப்பவர்கள் யார் என, தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும்.

இவ்வாறு அழகிரி கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (59)

kalidas c -  ( Posted via: Dinamalar Android App )
06-பிப்-202320:02:17 IST Report Abuse
kalidas c ஐயா அழகிரியாரே தங்களது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பதவி காலம் முடிவதற்குள் இனமான போராளிகள் என தங்களை அழைத்துக் கொள்ளும் திராவிட முன்னேற்றக் கழகத்தை அரசியல் ரீதியாக உயர்த்தி விட்டே தங்கள் விலகுவீர்கள் போல,,,,! கர்மவீரர் காமராஜர் அரசியல் யோக்கியவான் ஓமந்தூரார் ஆகியோர் அமர்ந்திருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு தங்கள் ஏற்படுத்திய கேடு இதுவல்லவோ.?
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
06-பிப்-202316:16:30 IST Report Abuse
Rafi 13 வயதில் எழுத துவங்கிய பேனா சமூக நீதிக்காகவே எழுதியது, அந்த பேனாவிற்கு சொந்தக்காரர், அரசியல் ரீதியாக அடித்தட்டு மக்களுக்கான அரசு அங்கீகாரத்தை வழங்கினார். சொகுசாக அடுத்தவர்களை அடக்கி ஆண்டவர்கள் கொஞ்சம் இறங்கிவர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள், விடுவார்களா? வாய்ப்பு கிடைக்கும்போது மீண்டும் பழைய நிலையையே நடைமுறை படுத்த முற்படுவார்கள், அதை கூட இந்த பேனா கம்பீரமாக நின்று தடுத்துவிடும்மே என்ற பயம் அந்த பேனாவை வரவிடாமல் ஆக்குவதே தங்களுக்கு சிறந்தது என கணித்து தங்களினால் உருவாக்கப்பட்டவர்களால் எதிர்ப்பை காட்டுகின்றார்கள், எதிர்ப்பில் வீரியம் கொண்டு எழுந்தவர் தான் இந்த பேனாவிற்கு சொந்தகாரர்.
Rate this:
06-பிப்-202320:20:31 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்அடித்தட்டு மக்களில் இருந்து ஒருவரை கட்சியின் தலைவர் ஆக்காதது ஏன் ????...
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
06-பிப்-202315:08:04 IST Report Abuse
INDIAN Kumar கடலூர் தொகுதி கன்பார்மா ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X