' காத்திருக்க வேண்டாம் ' : டி.ஜி.பி., திடீர் உத்தரவு

Updated : பிப் 06, 2023 | Added : பிப் 06, 2023 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை-'கடத்தல் உள்ளிட்ட குற்றங்கள் குறித்து வழக்குப் பதிவு செய்ய, எஸ்.பி.,க்களின் அனுமதிக்கு காத்திருக்க வேண்டாம்' என, போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார். அவரது உத்தரவில் கூறியிருப்பதாவது:கடத்தல் உட்பட பல்வேறு குற்றங்கள் தொடர்பாக, முதல் தகவல் அறிக்கையான, எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய, எஸ்.பி.,க்களின் அனுமதிக்காக காத்திருக்க

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-'கடத்தல் உள்ளிட்ட குற்றங்கள் குறித்து வழக்குப் பதிவு செய்ய, எஸ்.பி.,க்களின் அனுமதிக்கு காத்திருக்க வேண்டாம்' என, போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார்.



latest tamil news


அவரது உத்தரவில் கூறியிருப்பதாவது:

கடத்தல் உட்பட பல்வேறு குற்றங்கள் தொடர்பாக, முதல் தகவல் அறிக்கையான, எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய, எஸ்.பி.,க்களின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டாம்; அது தேவையும் இல்லை.


latest tamil news


பதற்றமான, நியாயமான மற்றும் முக்கிய விவகாரம் தொடர்பாக, தேவைக்கு தகுந்தவாறு சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரே வழக்கு பதிந்து, தகுந்த நடவடிக்கை எடுக்கலாம்.

இதற்காக, எஸ்.பி., உட்பட மேல் அதிகாரிகளின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டிய தேவை இல்லை.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

lana -  ( Posted via: Dinamalar Android App )
06-பிப்-202318:02:26 IST Report Abuse
lana ipc மற்றும் crpc சட்டப்படி ஏட்டையா அதாவது head constable FIR பதிவு செய்ய முடியும் என்று கேள்விப்பட்டு உள்ளேன். இங்கு sp உத்தரவு வேண்டும் என்று சொல்றது சட்டப்படி சரியா
Rate this:
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
06-பிப்-202317:09:50 IST Report Abuse
JeevaKiran போலீசார் எல்லோருக்கும் முன்மாதிரியாக இவரே ஒரு அ.வியாதியின் மீது ஊழல் வழக்கு பதிந்து காட்டவும். அப்போதான் மத்த போலீசாருக்கும் தைரியம் வரும்.
Rate this:
Cancel
Raa - Chennai,இந்தியா
06-பிப்-202311:32:20 IST Report Abuse
Raa யப்பா எவ்வளவு பெரிய அனுமதி....அதுவும் சுதந்திரம் வாங்கி 70+ வருடங்களுக்கு பிறகு. தப்பு செய்தா FIR போட கூட ரெகமண்டஷன் என்ற அவல நிலை உலகத்தில் எங்கும் இருக்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X