Chennai - Renikunda trains speed up | சென்னை -- ரேணிகுண்டா ரயில்கள் வேகம் அதிகரிக்கிறது| Dinamalar

சென்னை -- ரேணிகுண்டா ரயில்கள் வேகம் அதிகரிக்கிறது

Added : பிப் 06, 2023 | |
சென்னை,-சென்னை - ரேணிகுண்டா; அரக்கோணம் - ஜோலார்பேட்டை வழித்தடங்களில், ரயில்கள் மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட உள்ளதாக, தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:ரயில்களின் வேகத்தை அதிகரிக்க, 'குரூப் - ஏ' வழித்தடம், 'குரூப் - பி' வழித்தடம் என பிரிக்கப்பட்டுள்ளது. 'குரூப் - ஏ' வழித்தடத்தில் அதிகபட்சமாக 160 கி.மீ., வரையும்; 'குரூப் -
Chennai - Renikunda trains speed up   சென்னை -- ரேணிகுண்டா ரயில்கள் வேகம் அதிகரிக்கிறது

சென்னை,-சென்னை - ரேணிகுண்டா; அரக்கோணம் - ஜோலார்பேட்டை வழித்தடங்களில், ரயில்கள் மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட உள்ளதாக, தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ரயில்களின் வேகத்தை அதிகரிக்க, 'குரூப் - ஏ' வழித்தடம், 'குரூப் - பி' வழித்தடம் என பிரிக்கப்பட்டுள்ளது.

'குரூப் - ஏ' வழித்தடத்தில் அதிகபட்சமாக 160 கி.மீ., வரையும்; 'குரூப் - பி' தடத்தில் 130 கி.மீ., வரையும் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும்.

சென்னை -- ரேணிகுண்டா; அரக்கோணம் -- ஜோலார்பேட்டை வழித்தடங்களில் மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் செல்வதற்கான அனைத்து பணிகளும் முடிந்துள்ளன.

சென்னை -- ரேணிகுண்டா வழித்தடத்தில், தற்போது மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த வேகத்தை 130 கி.மீ., வரை அதிகரிப்பதற்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் அனுமதி, விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

அரக்கோணம் -- ஜோலார்பேட்டை வழித்தடத்தில், 'வந்தே பாரத், சதாப்தி' போன்ற அதிவேக விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த தடத்தில் மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஒப்புதல் கேட்கப்பட்டு உள்ளது.

சென்னை -- கூடூர் வழித்தடத்தில் மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதுபோல, ஜோலார்பேட்டை -- போத்தனுார், சென்னை - திண்டுக்கல் வழித்தடங்களிலும் வேகத்தை அதிகரிக்கும் பணி நடக்கிறது.

தெற்கு ரயில்வேயில் மொத்தம் 2,485 கி.மீ., துார பாதையில், ரயில்கள் மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் இயக்கப்படுகின்றன. சென்னை -- கோவை; சென்னை - மதுரை; ஈரோடு - திருச்சி உள்ளிட்ட முக்கிய வழித்தடங்கள் இதில் அடங்கும்.

இதேபோல், மதுரை - வாஞ்சி மணியாச்சி; திண்டுக்கல் - பொள்ளாச்சி; திருநெல்வேலி - தென்காசி உள்ளிட்ட வழித்தடங்களில் மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் ரயில்கள் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X