செஞ்சி : தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி கோவிலில் நடந்த தைப்பூச விழாவில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
செஞ்சி அடுத்த தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூச விழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று காலை 5:00 மணிக்கு தண்டாயுதபாணி சுவாமிக்கு மகா அபிஷேகமும், அலங்காரம் நடந்தது. 8:00 மணிக்கு தீபாராதனையும், பகல் 12:00 மணிக்கு காவடி அபிஷேகம், அலகு குத்தி தேர் இழுத்தல், காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
மதியம் 1:00 மணிக்கு சுவாமிக்கு பால் அபிஷேகம் நடந்தது. 3:30 மணிக்கு கோவில் குருக்கள் அருட்பெருஞ்ஜோதி சாமியின் மார்பின் மீது மாவு இடித்தல் மற்றும் மிளகாய் சாந்து அபிஷேகம் நடந்தது. 4:15 மணிக்கு செடல் சுற்றுதலும், தீமிதி விழாவும் நடந்தது.
திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.