உழைப்புக்கான மரியாதை இல்லாததே வேலையின்மைக்கு காரணம்: மோகன் பகவத்

Updated : பிப் 06, 2023 | Added : பிப் 06, 2023 | கருத்துகள் (16) | |
Advertisement
மும்பை: உழைப்புக்கான மரியாதை இல்லாதது சமூகத்தில் வேலையின்மைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியதாவது: மக்கள் எந்த விதமான வேலையை செய்தாலும், அதனை மதிக்க வேண்டும். இந்த உலகில் எந்த தொழிலையும் உயர்ந்தது, தாழ்ந்தது என்று பிரிக்க
RSS chief, Mohan Bhagwat, Unemployment, Society, World, Jobs, ஆர்எஸ்எஸ் தலைவர், மோகன் பகவத், வேலைவாய்ப்பு, வேலையின்மை, மரியாதை, உழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: உழைப்புக்கான மரியாதை இல்லாதது சமூகத்தில் வேலையின்மைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.



ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியதாவது: மக்கள் எந்த விதமான வேலையை செய்தாலும், அதனை மதிக்க வேண்டும்.

இந்த உலகில் எந்த தொழிலையும் உயர்ந்தது, தாழ்ந்தது என்று பிரிக்க முடியாது. இந்தியாவில் தற்போது நிலவும் வேலைவாய்ப்பின்மை பிரச்னைக்கும் இந்த ஏற்றத்தாழ்வு மனப்பான்மைதான் காரணம். உழைப்புக்கான மரியாதை இல்லாதது சமூகத்தில் வேலையின்மைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று. அனைவரும் வேலைகளின் பின்னால் ஓடுகின்றனர்.



latest tamil news

அரசு வேலைகள் 10 சதவீதம் மட்டுமே, தனியார் வேலைகள் 20 சதவீதம் மட்டுமே. உலகில் எந்த ஒரு நாடும் 30 சதவீதத்திற்கு மேல் வேலைவாய்ப்பை உருவாக்க முடியாது. நாட்டில் பல விவசாயிகளுக்கு அவர்கள் நல்ல வருமானத்துடன் இருந்தாலும் விவசாயம் செய்வதாலேயே இன்னும் திருமணம் நடைபெறுவதில்லை.

இந்தியா உலகின் வழிகாட்டியாக விஸ்வகுருவாக உருவாகும் சூழல் கனிந்துள்ளது. நம் நாட்டில் திறன்களுக்கு குறைவில்லை. எனவே நாம் விஸ்வகுருவான பின்னர் மற்ற வளர்ந்த நாடுகளை போல் இருக்கப் போவதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (16)

konanki - Chennai,இந்தியா
06-பிப்-202320:10:37 IST Report Abuse
konanki ஊழல் திருட்டு கொள்ளை பிரிவினை வன்முறை ஜாதி வெறி ரவுடியிசம் நில அபகரிப்பு பிரான் மனை நோக்குதல் போன்ற வெற்றி பாதை திரவஷங்களுக்கு அத்துப்படி யாக இருக்கும் போது உழைப்பு எதற்கு ஆபீஸர் ?
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
06-பிப்-202320:04:32 IST Report Abuse
konanki உழைப்புக்கு ஏற்ற ஊதியம் எப்படி பெறுவது என்று மோகன் சி லாசரஸ் , எஸ்ரா சர்குணம், ஜகத் காஸ்பெர், பால் தினகரன் அவர்களிடமிருந்து மட்டுமே கற்று கொள்ள முடியும்.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
06-பிப்-202320:01:41 IST Report Abuse
konanki திருட்டு டுபாக்கூர் டாஸ்மாக் தீய சகதி திரவிஷ கும்பலுக்கு உழைப்பு என்ற வார்த்தையே கொஞ்சம் கூட பிடிக்காது. தெரியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X