சர்ச்சைகளுக்கு இடையே விக்டோரியா கவுரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம்

Updated : பிப் 06, 2023 | Added : பிப் 06, 2023 | கருத்துகள் (15) | |
Advertisement
சென்னை: சர்ச்சைகளுக்கு இடையே சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருடன் மொத்தம் 5 பேர் புதிய நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதிகளாக நியமிப்பதற்காக 8 பேரின் பெயர்களை உச்சநீதிமன்ற கொலீஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருந்தது. அதில், உயர்நீதிமன்ற மதுரைக்
Chennai HC, Additional Judges, Victoria Gowri, Balaji, Ramakrishnan, Advocates, Centre, Approved, சென்னை உயர்நீதிமன்றம், நீதிபதிகள், நியமனம், மத்திய அரசு ஒப்புதல், விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன், வழக்கறிஞர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: சர்ச்சைகளுக்கு இடையே சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருடன் மொத்தம் 5 பேர் புதிய நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.



சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதிகளாக நியமிப்பதற்காக 8 பேரின் பெயர்களை உச்சநீதிமன்ற கொலீஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருந்தது. அதில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசின் வழக்கறிஞராக உள்ள விக்டோரியா கவுரியை, உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் 21 பேர் ஜனாதிபதிக்கும், உச்சநீதிமன்ற கொலீஜியத்திற்கும் கடிதம் அனுப்பியிருந்தனர். அதே நேரத்தில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மூத்த வழக்கறிஞர் பாலசுந்தரம் உள்ளிட்ட 56 வழக்கறிஞர்கள், விக்டோரியா கவுரியை நீதிபதியாக்க வலியுறுத்தி கடிதம் எழுதினர்.



latest tamil news

இந்த நிலையில் சர்ச்சைகளுக்கு இடையே விக்டோரியா கவுரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அவருடன் பாலாஜி, ராமகிருஷ்ணன் மற்றும் மாவட்ட நீதிபதிகளான கலைமதி, திலகவதி என மொத்தம் 5 பேர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஐந்து நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டதன் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (15)

07-பிப்-202308:45:45 IST Report Abuse
சூரியா கர்ணன், சந்துரு, அடுத்து வரப்போகும் ஜின்னா போன்றவர்கள் எல்லாம் சொந்தக் கருத்து இல்லாதவர்களா?
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
06-பிப்-202316:54:37 IST Report Abuse
J.V. Iyer பாராட்டுக்கள். உங்கள் பணி சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
06-பிப்-202316:29:26 IST Report Abuse
Rengaraj தற்போது இருக்கும் அரசியல் சூழ்நிலையில் வக்கீல் தொழிலில் அரசியல் சார்பு அற்றவர் , நடுநிலையாக முடிவு எடுத்து கேஸ் நடத்துபவர் என்பதை ஒரு வழக்கறிஞர் எல்லாக்காலகட்டத்திலும் நிலைநாட்ட முடியாது. அவரை ஏதாவது ஒரு வளையத்துக்குள் இழுத்து முத்திரை குத்தி விடுவார்கள். இது சாதாரணமாக கோர்ட் கேஸ் என்று அலையும் மக்களுக்கு நன்றாகவே தெரியும். அதற்கென்றே இந்த நாட்டில் அத்தனை பிரச்சினைகள் உள்ளன. எனவே நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் சார்பு மதம் சார்பு என்றெல்லாம் பேசுவதை சாதாரண மக்கள் கருத்தில் கொள்ளமாட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X