பெண்களுக்கு ரூ.413 கோடி உதவி: குஜராத்தில் அறிவித்தார் ஹிலாரி

Updated : பிப் 07, 2023 | Added : பிப் 07, 2023 | கருத்துகள் (7) | |
Advertisement
ஆமதாபாத், -குஜராத்துக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணமாக வந்திருந்த அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடும் பெண்களுக்காக, 413 கோடி ரூபாய் நிதி வழங்குவதாக அறிவித்துஉள்ளார். குஜராத் மாநிலம் ஆமதாபாதில், 'சேவா' என்ற பெண்கள் சுய உதவிக்குழு செயல்படுகிறது. இதன் தலைவரான எலா பட், சமீபத்தில் வயது மூப்பு காரணமாக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஆமதாபாத், -குஜராத்துக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணமாக வந்திருந்த அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடும் பெண்களுக்காக, 413 கோடி ரூபாய் நிதி வழங்குவதாக அறிவித்துஉள்ளார்.



latest tamil news


குஜராத் மாநிலம் ஆமதாபாதில், 'சேவா' என்ற பெண்கள் சுய உதவிக்குழு செயல்படுகிறது. இதன் தலைவரான எலா பட், சமீபத்தில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.

இவருடன், நீண்ட காலமாக நட்புடன் பழகி வந்த அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், இவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இரண்டு நாள் பயணமாக குஜராத் வந்தார்.

நேற்று முன் தினம் எலா பட்டிற்கு அஞ்சலி செலுத்திய ஹிலாரி கிளின்டன், 'சேவா' அமைப்பின் ௫௦வது ஆண்டு விழாவிலும் பங்கேற்றார்.

இங்கு, சுரேந்திரா மாவட்டத்தில் குடா கிராமத்தில் உள்ள உப்பளங்களில் வேலை பார்க்கும் பெண் தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய ஹிலாரி நேற்று தெரிவித்ததாவது:

மறைந்த எலா பட் மற்றும் சேவா அமைப்புடன் சேர்ந்து, ௩௦ ஆண்டுகள் பணிபுரியும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. தற்போது நாங்கள் அடுத்த, 50 ஆண்டுகள் குறித்து யோசித்து வருகிறோம்.

இன்று, கிளின்டன் உலக அமைப்பானது, இந்திய - அமெரிக்க அமைப்பான சேவா மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து, பெண்களுக்கான ௪௧௩.௮௨ கோடி ரூபாயை உலகளாவிய காலநிலை நிதியாக அறிவிக்கிறது.


latest tamil news


இந்த நிதி, பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கும், காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடும் அமைப்புகளுக்கும், கல்வி மற்றும் புதிய வாழ்வாதார வளங்களை அளிக்கவும் பயன்படும்.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பம், முறைசாரா துறை களில் பணிபுரியும் பெண்களுக்கு கூடுதல் சவாலை அளிக்கிறது; இதை சமாளிக்க இந்த நிதி உதவும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

Gopal - Jakarta,இந்தோனேசியா
07-பிப்-202310:32:10 IST Report Abuse
Gopal ஹிலாரி பயணத்தை உளவு துறை நன்றாக கண்காணிக்க வேண்டும். சோழியன் குடுமி சும்மா ஆடாது. இந்தியாவிற்கு கெடுதல் பண்ணவே இவங்க துடிப்பாங்க .
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
07-பிப்-202306:29:51 IST Report Abuse
D.Ambujavalli நிதியை கண்ணில் காட்டி மெல்ல மெல்ல அரசியலில் புக விட்டுவிடும் நிலை வந்துவிடப் போகிறது பிரிட்டிஷார் வியாபாரத்தால் பிடித்தார்கள். இவர்கள் பெண்களை குறி வைத்து நுழைந்தாலும் வியப்பில்லை நிர்வாகியின் அஞ்சலி, விழா என்று வந்த வேலையைப் பார்க்காமல் உதவி என்று ஆரம்பித்ததுதான் சந்தேகத்தை எழுப்புகிறது
Rate this:
Fastrack - Redmond,இந்தியா
07-பிப்-202307:36:03 IST Report Abuse
Fastrackஏதோ மாத்திரை கொடுத்தோமோ வூசி போட்டோமோ என்று காரியத்தில் கண்ணாயிருங்கள் .....
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
07-பிப்-202305:23:35 IST Report Abuse
J.V. Iyer நடக்கட்டும். சமூக விரோதிகளுக்கும், தேச விரோதிகளும் ஹில்லாரி வாயிலாக பணம் கொட்டுகிறது. இனிமேல் பெண்களை விட்டு தெருக்களில் இந்திய எதிப்பு கோஷம் இடலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X