'அதானி' குழும விவகாரம் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

Added : பிப் 07, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை,-'அதானி' குழும விவகாரம் குறித்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுதும் காங்கிரசார் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அதானி நிறுவனத்தின் முறைகேடுகள் பற்றிய ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கை குறித்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது கூட்டு பார்லிமென்ட் குழுவின் கீழ்
 'அதானி' குழும விவகாரம் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்



சென்னை,-'அதானி' குழும விவகாரம் குறித்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுதும் காங்கிரசார் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதானி நிறுவனத்தின் முறைகேடுகள் பற்றிய ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கை குறித்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது கூட்டு பார்லிமென்ட் குழுவின் கீழ் விசாரணை நடத்த வேண்டும்.

எல்.ஐ.சி., - எஸ்.பி.ஐ., வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில், மத்திய அரசு முதலீடு செய்ய நிர்ப்பந்தித்தது குறித்து, பார்லிமென்டில் விவாதிக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுதும் காங்கிரசார் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை அண்ணாசாலை, தண்டையார்பேட்டை எல்.ஐ.சி., அலுவலகங்கள்; போரூர், அடையாறு எஸ்.பி.ஐ., வங்கிகள் அருகே உட்பட, ஐந்து இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டங்களில், முன்னாள் தலைவர் தங்கபாலு, சட்டசபை காங்., தலைவர் செல்வப்பெருந்தகை உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

மத்திய அரசையும், அதானி குழுமத்தையும் கண்டித்து, காங்கிரசார் கோஷம் எழுப்பினர். அப்போது, தடையை மீறி பேரணி நடத்த முயன்ற போது, போலீசார் தடுத்து நிறுத்தினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

Dharmavaan - Chennai,இந்தியா
07-பிப்-202308:59:35 IST Report Abuse
Dharmavaan நீரவ் மோடி, மல்லய்யா, சோக்சி இவங்களுக்கு அளவுக்கு மீறி கமிஷன் வாங்கி கடன் கொடுத்தது எந்த திருடன்
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
07-பிப்-202307:41:37 IST Report Abuse
சீனி நஷ்மில்லாத தொழில் சர்ச், மசூதி, மடம் நடத்துவது மட்டுமே. எனவே இவங்களுக்கு மட்டுமே லோன் கொடுத்தால் காங்கிரஸ் மடையர்கள் சந்தோசப்படுவார்களா ? உழைத்த்து நாட்டை முன்னேற்றி வரி கட்ட ஆள் வேணுமே ?
Rate this:
Cancel
vadivelu - thenkaasi,இந்தியா
07-பிப்-202307:21:25 IST Report Abuse
vadivelu என்னங்க அது விவகாரம்? அதானி ஒரு மோசடிக்காரன் என்று ஒரு அமெரிக்கன் முதலாளி சொன்னா , பாதிக்கப்பட்ட வனில்லே கோர்ட்டுக்கு போகணும். இவிங்க என்ன சொல்றாங்க, அதானிக்காக அரசு அந்த அமெரிக்க காரன் மேலே கேசு போடணுமின்னா. இல்லை என்ன காரணம் என்று சொல்லி போராட வேண்டியதுதானே.மக்கள் வரிப்பணம் போச்சா, இல்லை மக்கள் நாங்கள் பாதிக்க பட்டுள்ளோம் என்று சொல்கிறார்களா..அதானி பங்கு வச்சு இருந்தவங்க நஷ்டமடைந்தா கூட அவிங்க அரசிடம் எப்படி முரையிடுவாங்க.LIC, SBI பாதிக்க பட்டதாக உருட்டுறாங்க, ஆனா அந்த இரண்டும் எங்களுக்கு ஒன்றும் பாதிப்பே இல்லை என்கிறார்கள்.அவர்களின் பங்கு களும் ஷேர் மார்க்கெட்டில் அப்படி ஒன்றும் விழுந்து விடவில்லையே.என்னவோ போங்க 2014 ல் இருந்து இப்படித்தான் இவிங்களும் எதையவாது தூக்கி பிடித்து கத்தி கதறி ஓய்ந்து போறாங்க.கோர்ட்டுக்கும் போறதில்லை,உருட்டிகிட்டே இருக்காங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X