குடிநீர் தொட்டியில் இறந்த நாய் உடல் :அதிர்ச்சியில் மக்கள்

Added : பிப் 07, 2023 | கருத்துகள் (10) | |
Advertisement
சிவகாசி விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே புதுக்கோட்டையில் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் நாயை கொன்று போட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.புதுக்கோட்டையில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுத்தம் செய்வதற்காக நேற்று தொட்டி மேல் பணியாளர்கள் ஏறினர். தொட்டிக்குள் இறந்த நாய் கிடந்ததால்
குடிநீர் தொட்டியில் இறந்த நாய் உடல் :அதிர்ச்சியில் மக்கள்

சிவகாசி விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே புதுக்கோட்டையில் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் நாயை கொன்று போட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
புதுக்கோட்டையில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுத்தம் செய்வதற்காக நேற்று தொட்டி மேல் பணியாளர்கள் ஏறினர். தொட்டிக்குள் இறந்த நாய் கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். மர்ம நபர்கள் நாயை கொன்று 50 அடி உயரம் உள்ள தொட்டியில் ஏறி போட்டுள்ளனர்.
ஊராட்சி தலைவர் காளீஸ்வரி எம்.புதுப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தார். சிவகாசி டி.எஸ்.பி., தனஞ்செயன் தொட்டியில் ஏறி ஆய்வு செய்தார். முதற்கட்ட விசாரணையில் நாயை கொன்று போட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கால்நடை துறையினர் பிரேத பரிசோதனை செய்வதற்காக நாய் உடலை கொண்டு சென்றனர். தொட்டியை சுத்தம் செய்வதற்காக முதல் நாள் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் மக்கள் இதனை பயன்படுத்தவில்லை. எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (10)

Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
07-பிப்-202319:14:14 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy தொட்டியை சுத்தம் செய்யும் உண்மை முறையை இது கற்ப்பிக்கிறது. இல்லை தேதியை மாற்றி எழுதி இருப்பார்கள்
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
07-பிப்-202312:43:39 IST Report Abuse
Krishnamurthy Venkatesan இனிவரும் காலங்களில் இத்தகைய குடிநீர் தொட்டிகளை கண்காணிக்க CCTV கண்காணிப்பு காமெராவை வைக்க வேண்டும்.
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
07-பிப்-202310:20:19 IST Report Abuse
தமிழ்வேள் லாரி மற்றும் கேன் குடிநீர் விற்கும் ஆசாமிகள் கூட தங்கள் விற்பனை அதிகரிக்க, இந்த மாதிரி இழிவேலை செய்திருக்கலாம் ..அந்த கோணத்திலும் விசாரிக்கவேண்டும் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X