ஓமந்தூரார் எங்கே; நீங்கள் எங்கே?

Updated : பிப் 07, 2023 | Added : பிப் 07, 2023 | கருத்துகள் (28) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்.........ம.திராவிடமணி, ஈரோட்டிலிருந்து அனுப்பிய, 'இ- - மெயில்' கடிதம்: 'முன்னாள் முதல்வர் ஓமந்துார் ராமசாமி ரெட்டியாரின், 128 வது பிறந்த நாளை கொண்டாடும்இந்த ஆண்டிலாவது, தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும்'என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவருக்கு சில

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்.........



ம.திராவிடமணி, ஈரோட்டிலிருந்து அனுப்பிய, 'இ- - மெயில்' கடிதம்:

'முன்னாள் முதல்வர் ஓமந்துார் ராமசாமி ரெட்டியாரின், 128 வது பிறந்த நாளை கொண்டாடும்இந்த ஆண்டிலாவது, தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும்'என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.



latest tamil news


அவருக்கு சில கேள்விகள்...

 மடங்கள், ஆதீனங்கள், கோவில்களின் சொத்துக்கள், ஒரு சிலர் வசமிருந்ததை மீட்டு பொதுவாக்கினார், ஓமந்துாரார். ஆனால், பா.ம.க.,வை நீங்களும், உங்களின் மகனும் தனிப்பட்ட சொத்தாக்கி உரிமை கொண்டாடி வருகிறீர்களே... அது ஏன்?

 ராஜாஜியும், காமராஜரும் முதல்வராகமுன்மொழிந்தும், மூன்று மாத யோசனைக்கு பிறகே, முதல்வராக பதவியேற்றார் ஓமந்துாரார். ஆனால், அரசு பதவி என்று வரும் போது, நீங்கள்,உங்களின் மகனுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறீர்களே... கட்சியில் வேறு நிர்வாகிகளே இல்லையா?

 பாகிஸ்தான் நாட்டுடன் ரகசிய உறவு வைத்திருந்த ஹைதராபாதை, இந்தியாவுடன் இணைக்கும்படி, வல்லபபாய் படேலை நிர்பந்தம் செய்து, தேசிய ஒற்றுமைக்கு அடித்தளமிட்டவர் ஓமந்துாரார். ஆனால், தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க கோரிக்கை வைத்தவராயிற்றே நீங்கள்?

 முதல்வராக இரண்டு ஆண்டுகள் பதவி வகித்த ஓமந்துாரார், தான் சார்ந்த காங்., கட்சியினருக்கும், குடும்ப உறவுகளுக்கும் இடமளிக்காமல் இருந்தார். ஆனால் நீங்களோ, மகனுக்கு மிஞ்சியது தான், மற்றவர்களுக்கு என்ற கொள்கை உடையவர் அல்லவா?


latest tamil news


 முதல்வராக பதவி வகித்த போது, தன்னை சந்திக்க வருபவர்கள், என்ன காரணத்திற்காக வருகின்றனர் என, துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்து, அனுமதி பெற்ற பிறகே உள்ளே வர வேண்டும் என்ற பாகுபாடற்ற, நேர்மையான கொள்கையை பின்பற்றியவர் ஓமந்துாரார். உங்களால் அது சாத்தியமா?

 முதல்வராக பதவி வகித்த போது, உடல் நிலை சரியில்லாமல் போன நேரத்தில், அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார் ஓமந்துாரார். ஆனால், மருத்துவக்கல்லுாரிக்கு முறைகேடாக ஒப்புதல் வழங்கி, லாபம் பார்த்தவராயிற்றே உங்களின் மகன் அன்புமணி.

ஓமந்துாராரின் பாணியை, அவரின் கொள்கைகளை கிஞ்சிற்றும் பின்பற்றாதநீங்கள், அவரை உதாரணம் காட்டி பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவது போல உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (28)

g.s,rajan - chennai ,இந்தியா
07-பிப்-202321:02:48 IST Report Abuse
g.s,rajan சாதி வெறி மற்றும் பதவி வெறி பிடித்தவர் இந்த ராமதாஸ் தமிழ்நாட்டில் பல பேருந்துகளைக் கொளுத்தியும் ,சாலைகளில் உள்ள பல ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டியும் அராஜகங்கள் செய்து பொது மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி மூலம் பல்வேறு இன்னல்களைக் கொடுத்தவர்,ராமதாசுக்கும் ஓமந்தூராருக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது,.டவுசர் இப்போ கிழிஞ்சு போச்சு ... .
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
07-பிப்-202320:28:22 IST Report Abuse
M  Ramachandran செருப்பால் அடியுங்கள் என்று சொன்ன செல்லை காப்பத்தாத அப்பன் பதவிக்கு ஆளா பேயாய் அலையும் மகன்
Rate this:
Cancel
07-பிப்-202320:16:00 IST Report Abuse
பேசும் தமிழன் என் குடும்பத்தில் யாராவது பதவிக்கு வந்தால் .....எங்களை சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள் என்று சொன்னவர் தான் இந்த ராமதாஸ் ....மக்கள் உங்களை தான் தேடிக்கொண்டு உள்ளார்கள் !!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X