நடை மேம்பாலம் திறக்கணும் :உடுமலை மக்கள் எதிர்பார்ப்பு

Added : பிப் 07, 2023 | |
Advertisement
உடுமலை:கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை பஸ் ஸ்டாண்ட் உள்ளது. கோவை, பாலக்காடு, பொள்ளாச்சி, ஊட்டி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி ஆகிய நகரங்களுக்கு உடுமலை வழியாக பஸ்கள் செல்கின்றன.தினமும், ஆயிரக்கணக்கான பயணியர், உடுமலை வருகின்றனர். பஸ் ஸ்டாண்ட் வெளியே பொள்ளாச்சி ரோடு செல்கிறது. தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்களால், பயணியர், பொதுமக்கள்

உடுமலை:கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை பஸ் ஸ்டாண்ட் உள்ளது. கோவை, பாலக்காடு, பொள்ளாச்சி, ஊட்டி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி ஆகிய நகரங்களுக்கு உடுமலை வழியாக பஸ்கள் செல்கின்றன.

தினமும், ஆயிரக்கணக்கான பயணியர், உடுமலை வருகின்றனர். பஸ் ஸ்டாண்ட் வெளியே பொள்ளாச்சி ரோடு செல்கிறது. தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்களால், பயணியர், பொதுமக்கள் பொள்ளாச்சி ரோட்டை கடக்க முடியாமல் திணறினர்.

இதையடுத்து, உடுமலை நகராட்சி சார்பில், நடைமேம்பாலம் கட்டப்பட்டது. கட்டப்பட்டு பல மாதங்களாகியும், இன்னும் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. இதனால், மக்கள் ரோட்டை கடக்க சிரமப்படுவது தொடர்கிறது.

அவசரமாக ரோட்டை கடக்கும் போது விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, நடைமேம்பாலத்தை உடனடியாக திறக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X