மொழிவாரி சிறுபான்மையினர் தமிழ் தேர்வு எழுத விலக்கு நீட்டிப்பு

Updated : பிப் 07, 2023 | Added : பிப் 07, 2023 | கருத்துகள் (15) | |
Advertisement
புதுடில்லி : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கட்டாயமாக தமிழ் மொழி தேர்வு எழுதுவதில் இருந்து தமிழக மொழிவாரி சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டிருந்த விலக்கை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழிப் பாடத்தை எழுதுவதை கட்டாயமாக்கி 2016ல் அரசாணை வெளியிடப்பட்டது.இதை எதிர்த்து தமிழக மொழிவாரி
Tamil, exam, Supreme Court, SC, தமி்ழ், தேர்வு, சுப்ரீம் கோர்ட், உச்ச நீதிமன்றம்,சிறுபான்மையினர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கட்டாயமாக தமிழ் மொழி தேர்வு எழுதுவதில் இருந்து தமிழக மொழிவாரி சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டிருந்த விலக்கை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழிப் பாடத்தை எழுதுவதை கட்டாயமாக்கி 2016ல் அரசாணை வெளியிடப்பட்டது.இதை எதிர்த்து தமிழக மொழிவாரி சிறுபான்மையினர் கூட்டமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 2019ல் அளித்த உத்தரவில் 2020, 2021, 2022 கல்வியாண்டுகளில் தமிழ் மொழி தேர்வை எழுதுவதற்கு அவர்களுக்கு விலக்கு அளித்திருந்தது.


இந்நிலையில் தமிழக மொழிவாரி சிறுபான்மையினர் கூட்டமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இதுவரை தெலுங்கு, கன்னடா, உருது, மலையாளம் போன்ற மொழிகள் கட்டாய மொழிப் பாடங்களில் இருந்தன. இவற்றை நீக்கி தமிழ் மொழியை கட்டாயமாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


latest tamil news

இதன் வாயிலாக தாய் மொழியை கற்கும் வாய்ப்பு தமிழகத்தில் உள்ள மொழிவாரி சிறுபான்மையினரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. எங்கள் தாய் மொழியில் படிப்பதை எதிர்க்கும் தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


இந்த மனு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு கடந்தாண்டு செப்.ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.கே. கவுல் மனோஜ் மிஸ்ரா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.


அப்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழிப் பாடத்தை எழுதுவதற்கு மொழிவாரி சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டிருந்த விலக்கை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதாக அமர்வு குறிப்பிட்டுள்ளது.மேலும் வரும் ஜூலையில் இந்த வழக்கை விசாரித்து உரிய உத்தரவை பிறப்பிப்பதாகவும் அமர்வு குறிப்பிட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (15)

Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
07-பிப்-202323:24:13 IST Report Abuse
Matt P என்ன படிக்க விரும்புகிறார்களோ எப்படி படிக்க விரும்புகிறார்களோ அப்படி படிக்க விடுங்கள். எதையும் திணிக்க கூடாது என்று தானே சொல்லி வருகிறார்கள். நாம் செயும் வினைகளுக்கு நாம் தான் காரணம். தமிழை சரியாக படிக்காத காரணத்தினால் அவர்கள் வெளி மாநிலங்களுக்கு வேலை தேடும் நிலையும் வரலாம்.வெளிமாநிலங்களை பூர்வீகமாக கொண்டவர்கள் வந்து இங்கு குடியேறுபவர்கள் எதகனையோ தமிழில் இலக்கியங்கள் படைத்து சாதனை படைத்திருக்கிறார்கள். , ஜெயமோகன் என்ற எழுத்தாளர் தமிழிலும் மலையாளத்திலும் எழுதி சாதனை படைப்பதாக தெரிகிறது.என்ன தான் படித்தாலும் தமிழை அவர்கள் வெளியில் பேசி தான் ஆக வேண்டும்.இன்னும் பல தமிழ் குடிமக்களுக்கு ல ள ழ ர ற வித்தியாசம் தெரியவில்லை.
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
07-பிப்-202321:01:26 IST Report Abuse
jagan தமிழ் நாட்டில் தெலுங்கு தாய் மொழியாக கொண்டவர்கள் 35% (KN நேரு, சாத்தூர் ராமசந்திரன், வைகோ EVKS இளங்கோவன், G பேமிலி சாம்பில்). கன்னடம் 17% (சொரியார், நடிகர்கள் சத்யராஜ், சூர்யா மற்றும் மேற்கு மாவட்ட கௌண்டர்கள் எல்லாம் கன்னட கவுடா வகைரா ) மலையாளம் 21%( நீதி கட்சி நாயர் முதல் முக்காவாசி திரையுலகம்). நிஜமாவே தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் தமிழ்நாட்டில் மைனாரிட்டி தான். எனவே தமிழ் தேர்வு தேவையில்லாதது.
Rate this:
07-பிப்-202322:40:18 IST Report Abuse
பேசும் தமிழன்அய்யோ....உண்மையை இப்படி போட்டு உடைத்து விட்டீர்களே ??? தமிழர்கள் இனியாவது விழித்து கொள்ள வாய்ப்புள்ளதா ???...
Rate this:
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
08-பிப்-202302:46:12 IST Report Abuse
Matt Pசத்யராஜும் வேற்று மொழி தானா.?.அப்புறம் ஏன் ரஜினி இருந்த மேடையில் அநாகரிகமாக நடந்து கொண்டார் காஞ்ச தமிழன் மாதிரி...
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
07-பிப்-202313:42:40 IST Report Abuse
GMM மாநில அளவில் தமிழகத்தில் வசிக்கும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி தாய் மொழி மாணவர்கள் உண்டு. உருது மதம் சார்ந்த மொழி ? சமஸ்கிருத மொழி மாநில மொழிஅங்கீகாரம் பெறவில்லை.? தாய் மொழியாக கொண்ட சிறு பான்மை மாணவர்கள் கட்டாயம் தமிழ் தேர்வு ஆக வேண்டும் என்றால் ஆதரவு. தேசிய அளவில் இந்தி இணைப்பு மொழிக்கு எதிர்ப்பு. சமசீர் திராவிட கொள்கை எப்போதும் புரியாது. நீதிமன்றம் நிலையான விலக்கு அளிக்க முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X