பிறந்த குழந்தை பேசியதா? உத்திரமேரூர் அருகே பரபரப்பு!

Added : பிப் 07, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
உத்திரமேரூர்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், அழிசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன், 27, கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி, 22, நிறைமாத கர்ப்பிணியான ரேவதியை, பிரசவத்திற்காக, உத்திரமேரூர் அடுத்த களியாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்திருந்தனர்.நேற்று காலை 10:15 மணிக்கு, ரேவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. களியாம்பூண்டி ஆரம்ப சுகாதார நிலைய
Uttaramerur, Kanchipuram, Baby, உத்திரமேரூர், காஞ்சிபுரம், குழந்தை, மருத்துவமனை, Hospital,

உத்திரமேரூர்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், அழிசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன், 27, கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி, 22, நிறைமாத கர்ப்பிணியான ரேவதியை, பிரசவத்திற்காக, உத்திரமேரூர் அடுத்த களியாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்திருந்தனர்.

நேற்று காலை 10:15 மணிக்கு, ரேவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. களியாம்பூண்டி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் பிருந்தா, பிரசவத்திற்கான சிகிச்சை அளிக்க, ரேவதியின் உறவினர் லதா உடனிருந்துள்ளார்.

அப்போது, ரேவதிக்கு பிறந்த குழந்தை, அழுவதற்கு பதிலாக 'நான் வந்துட்டேன்' எனக் கூறியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியதையடுத்து, பொதுமக்கள் பலர் அம்மருத்துவமனையில் திரண்டு, பிறந்ததும் பேசியதாக கூறப்படும் குழந்தையை ஆச்சரியமுடன் பார்த்து சென்றனர்.

இது குறித்து, களியாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சாய்ராஜ் கூறியதாவது: பிரசவத்தின் போது நான் அங்கு இல்லை. பிரசவம் பார்த்த செவிலியர், குழந்தை பிறந்ததும் அழவில்லை. மாறாக பேசியதாக கூறி, நம்புகிறார். குழந்தை பேசியதாக கூறுவது நம்பத் தகுந்ததாக இல்லை. இவ்வாறு அவர்கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
08-பிப்-202312:04:56 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் குழந்தையோட அம்மா ரஜினி ரசிகையாம், கடைசி நிமிஷம் வரை கபாலி படத்தை நெறைய தடவை பாத்திருப்பாங்க போல. அதான் குழந்தை ரஜினியோட வசனத்தை பேசிக்கிட்டே வந்திருக்கு.
Rate this:
Cancel
v srinivasan - chennai,இந்தியா
07-பிப்-202310:23:26 IST Report Abuse
v srinivasan குழந்தை பேசியதா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். தகுந்த மருத்துவர் இல்லாமல் செவிலியர் ஏன் பிரசவம் பார்த்தார் குழந்தைக்கோ தாய்க்கோ ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு?
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
07-பிப்-202308:35:21 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN பக்கத்து பெட்ல பெண் குழந்தை பொறந்திருந்தா அத சாக்கிரதையா பார்த்துக்குங்கப்பு ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X