'மீட்டர் ரீடிங்' கணக்கெடுப்பு தாமதம்; அதிக கட்டணம் செலுத்தும் மக்கள்

Updated : பிப் 07, 2023 | Added : பிப் 07, 2023 | கருத்துகள் (21) | |
Advertisement
சென்னை : வீடுகளில் மின் பயன்பாடு கணக்கெடுக்க, ஊழியர்கள் தாமதமாக செல்வதால், குறைந்த மின்சாரம் பயன்படுத்துவோரும், அதிக கட்டணம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.மின்சார ஒழுங்குமுறை ஆணையம், 2022 செப்., 10 முதல் மின் கட்டணத்தை உயர்த்தியது. எனவே, மின் பயன்பாட்டை குறித்த தேதியில் கணக்கெடுக்குமாறு, ஊழியர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டது.ஆனால், வழக்கம் போல் ஊழியர்கள்
Chennai, Electricity Charges, TNEB, சென்னை,  மின் கட்டணம், மின் வாரியம், Electricity, Electricity Board,மின்சாரம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



சென்னை : வீடுகளில் மின் பயன்பாடு கணக்கெடுக்க, ஊழியர்கள் தாமதமாக செல்வதால், குறைந்த மின்சாரம் பயன்படுத்துவோரும், அதிக கட்டணம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மின்சார ஒழுங்குமுறை ஆணையம், 2022 செப்., 10 முதல் மின் கட்டணத்தை உயர்த்தியது. எனவே, மின் பயன்பாட்டை குறித்த தேதியில் கணக்கெடுக்குமாறு, ஊழியர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டது.

ஆனால், வழக்கம் போல் ஊழியர்கள் தாமதமாக செல்வதால், குறைந்த மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளிலும், 100 யூனிட் இலவசம், 500 யூனிட் வரை மானிய சலுகை கிடைக்காத நிலை ஏற்படுகிறது.

இதுதொடர்பாக, பிரிவு அலுவலக உதவி பொறியாளர்களிடம் புகார் அளித்தும், நடவடிக்கை எடுப்பதில்லை.

நேரில் செல்லாமல், முந்தைய மின் பயன்பாட்டை ஒப்பீட்டு பார்த்து, இஷ்டத்திற்கு கணக்கெடுப்பது, அதிக மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளில், குறைத்து கணக்கெடுப்பது போன்ற தவறுகளும் நடக்கின்றன.


latest tamil news


எனவே, மின் வாரிய தலைமை அலுவலக அதிகாரிகள், தினமும் தலா இரண்டு பிரிவு அலுவலகத்திற்கு ஆய்வுக்கு சென்று, மின் பயன்பாடு கணக்கெடுப்பு தொடர்பாக ஆய்வு செய்ய, மின் வாரியம் உத்தரவிட வேண்டும்.

அப்போது தான், அதிகாரிகளின் வருகைக்கு பயந்து, அனைத்து ஊழியர்களும் சரியான தேதியில் மின் பயன்பாட்டை கணக்கெடுப்பர். இதனால், நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாததுடன், மின் வாரியத்திற்கும் இழப்பு ஏற்படாது.

ஒரு நாளைக்கு ரூ.250 சம்பளம்

சில ஊழியர்கள் கணக்கெடுக்க செல்லாமல், தங்களுக்கு வேண்டிய சிலரை கணக்கெடுக்க அனுப்புகின்றனர். இதற்காக அவர்களுக்கு தினமும், 250 ரூபாய் சம்பளம் வழங்குவதாகவும் புகார்கள் எழுகின்றன. இதுதொடர்பாக தீவிர விசாரணைக்கு உட்பட்டால், பல முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரும்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (21)

g.s,rajan - chennai ,இந்தியா
07-பிப்-202321:42:13 IST Report Abuse
g.s,rajan தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த ஜென்மத்தில் விடியாத கஷ்டம் ...
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
07-பிப்-202320:33:45 IST Report Abuse
M  Ramachandran பல ஏற்றத்தய் கண்டா தமிழக மக்கள் மனம் தளர மாட்டார்கள். ஒட்டு போட்டதற்கு மட்டற்ற மகிழ்ச்சியில் மக்கள்
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
07-பிப்-202320:23:51 IST Report Abuse
Ramesh Sargam இப்படி எல்லாம் மக்களிடம் அதிக கட்டணம் இந்த திருட்டு திமுக அரசு ஏன் வசூலிக்கிறது புரிகிறதா? ஆம், அந்த கருப்பு கண்ணாடிக்காரரின் பேனாவுக்கு நினைவு சின்னம் வைக்க இப்படி "பைசா வசூல்"
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X