SBIs loan to Adani is manageable: CreditSides report | அதானிக்கு எஸ்.பி.ஐ., கொடுத்த கடன் நிர்வகிக்கக் கூடியதே: கிரெடிட்சைட்ஸ் அறிக்கை| Dinamalar

அதானிக்கு எஸ்.பி.ஐ., கொடுத்த கடன் நிர்வகிக்கக் கூடியதே: கிரெடிட்சைட்ஸ் அறிக்கை

Updated : பிப் 07, 2023 | Added : பிப் 07, 2023 | கருத்துகள் (28) | |
அதானி குழுமத்திற்கு எஸ்.பி.ஐ., தந்துள்ள மொத்தக் கடன் ரூ.27,000 கோடி என்பது நிகரக் கடன்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவு மற்றும் சொத்துக்களுக்கு ஈடாக தான் கடன் தரப்பட்டுள்ளது, பங்குகளுக்காக கடன் தரப்படவில்லை என்பதால், அவை நிர்வகிக்கக் கூடிய அளவிலேயே இருக்கிறது என கடன் ஆய்வு நிறுவனமான கிரெடிட்சைட்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதானி குழுமத்திற்கு எதிராக
SBIs loan to Adani is manageable: CreditSides report  அதானிக்கு எஸ்.பி.ஐ., கொடுத்த கடன் நிர்வகிக்கக் கூடியதே: கிரெடிட்சைட்ஸ் அறிக்கை

அதானி குழுமத்திற்கு எஸ்.பி.ஐ., தந்துள்ள மொத்தக் கடன் ரூ.27,000 கோடி என்பது நிகரக் கடன்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவு மற்றும் சொத்துக்களுக்கு ஈடாக தான் கடன் தரப்பட்டுள்ளது, பங்குகளுக்காக கடன் தரப்படவில்லை என்பதால், அவை நிர்வகிக்கக் கூடிய அளவிலேயே இருக்கிறது என கடன் ஆய்வு நிறுவனமான கிரெடிட்சைட்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதானி குழுமத்திற்கு எதிராக ஹிண்டன்பர்க் நிதி ஆய்வு நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கை உலக முதலீட்டாளர்களை அச்சத்திற்குள்ளாக்கியது. அதானி குழுமம் கணக்குகளில் மோசடி செய்ததாகவும், பங்கு விலையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாகவும் கூறியது. அடுத்த சில நாட்களில் அதானி குழும பங்குகளின் சந்தை மதிப்பில் 10 ஆயிரம் கோடி டாலரை இழந்தது. இதனையடுத்து அதானிக்கு கடன் கொடுத்த நிறுவனங்கள், அதில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் மீது கவனம் திரும்பியது. பொதுத் துறை வங்கிகளான எஸ்.பி.ஐ., பஞ்சால் நேஷனல் வங்கி உள்ளிட்டவை பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் தந்துள்ளன. எல்.ஐ.சி., நிறுவனமும் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதனால் இவற்றின் பங்குகளும் கடந்த வாரத்தில் சரிவைச் சந்தித்தன.

எனவே, இந்த நிறுவனங்களுக்கு பாதிப்பு என்ற வதந்தி பரப்பப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிக்கை வெளியிட்டு தெளிவுப்படுத்தி வருகின்றன. டிசம்பரில் முடிவடைந்த காலாண்டில், அதானி குழுமத்திற்கு எஸ்.பி.ஐ., தந்துள்ள கடன், மொத்த கடனில் 0.88 சதவீதம் அல்லது ரூ.27,000 கோடி. இந்தக் கடன்களில் பெரும்பாலானவை பணமாக்கக் கூடிய சொத்துக்களுக்கு ஈடாக தரப்பட்டவை. பங்குகளுக்கு ஈடாக கடன்கள் வழங்கப்படவில்லை என ஆர்.பி.ஐ.,யிடம் தெரிவித்துள்ளது.


latest tamil news

இந்நிலையில் கடன் ஆய்வு நிறுவனமான கிரெடிட்சைட்ஸ் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: மோசமான கடன்களுக்காக எஸ்.பி.ஐ., ஒதுக்கியுள்ள இருப்பு மற்றும் ப்ரீ புரொவிஷன் லாபம் உருவாக்கத் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் எஸ்பிஐ நன்கு நிர்வகிக்கக்கூடிய அளவிலேயே அதானிக்கு கடன் தந்துள்ளது. ரூ.27,000 கோடி கடன் என்பது 2023ன் 9 மாத லாபத்தில் 34 சதவீதத்திற்குச் சமம். பெரும்பாலான கடன்கள் முடிக்கப்பட்ட மற்றும் பணம் உருவாக்கும் சொத்துக்களுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை கட்டுமானத்தில் இருக்கும் திட்டங்கள். வங்கி சில நிதியில்லாத திட்டங்களுக்கும் கடன் கொடுத்துள்ளது. ஆனால் அந்தக் கடன்களுக்கு வேறு வங்கியின் உத்தரவாதங்கள் உள்ளன. பங்கு கையகப்படுத்துதல் நடவடிக்கைகளுடன் எந்த கடனும் தொடர்புடையது அல்ல. என கூறியுள்ளனர்.

கடந்த வாரம், எஸ்பிஐ தலைவர் தினேஷ் காரா, அதானி குழுமம் கடன்களை ஒழுங்காக திருப்பிச் செலுத்தி வந்துள்ளது. அதானி குழும திட்டங்களுக்கு உறுதியான சொத்துக்கள் மற்றும் போதுமான பணப்புழக்கங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே கடன் வழங்கியுள்ளோம்” என்று கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X