திரிபுராவில் பாஜ., ஆட்சியில் ஒவ்வொரு கிராமத்திற்கும் மின்சாரம்: ராஜ்நாத் சிங் பெருமிதம்

Updated : பிப் 07, 2023 | Added : பிப் 07, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
அகர்தலா: பாஜ., ஆட்சிக்கு வந்ததில் இருந்து திரிபுராவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் மின்சாரம் வந்துவிட்டது என திரிபுராவில் நடந்த பேரணியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். திரிபுரா சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் மும்முரமாக நடந்து வருகிறது. திரிபுரா மாநிலம் உனகோடி மாவட்டத்தில் நடந்த 'விஜய் சங்கல்ப் பேரணியில்' மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

அகர்தலா: பாஜ., ஆட்சிக்கு வந்ததில் இருந்து திரிபுராவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் மின்சாரம் வந்துவிட்டது என திரிபுராவில் நடந்த பேரணியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.




latest tamil news


திரிபுரா சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் மும்முரமாக நடந்து வருகிறது. திரிபுரா மாநிலம் உனகோடி மாவட்டத்தில் நடந்த 'விஜய் சங்கல்ப் பேரணியில்' மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: 2018 ம் ஆண்டு முதல் பாஜ., ஆட்சியில் திரிபுரா மாநிலத்திற்கு தண்ணீர், கழிப்பறை மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைத்துள்ளது. ​​

திரிபுராவின் குழந்தைகள் குத்து விளக்கு ஏற்றி படிப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் பாஜ., ஆட்சிக்கு வந்ததில் இருந்து திரிபுராவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் மின்சாரம் வந்துவிட்டது.



latest tamil news


மேலும் 12 லட்சத்துக்கு அதிகமானோருக்கு ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இது பொருமாதார வசதியில் பின்தங்கி இருக்கும் மக்களுக்கு பெரிதும் உதவும். திரிபுரா மக்கள் பல ஏற்ற தாழ்வுகளை கண்டுள்ளனர்.



இந்தியாவுடன் பிரிக்க முடியாத பந்தம் அவர்களுக்கு உள்ளது. திரிபுரா மக்களுக்கு இணைப்பு என்பது கடினமான பகுதியாக இருந்தது. ஆனால் 2018 முதல் பா.ஜ., ஆட்சியின் போது அந்த சிக்கலை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. வரும் தேர்தலில் திரிபுரா மக்கள் எங்களுக்கு மீண்டும் சேவை செய்ய வாய்ப்பளிப்பார்கள் என நம்புகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

07-பிப்-202320:19:05 IST Report Abuse
srinivasan Ramesh நியூசிலாந்து பிரதமர் கண்ணீருடன் பதவியை ராஜினாமா செய்தார். காரணம் - பணமில்லை, வேலையில்லை, பொருளாதாரம் திசை தெரியாத படகு போல... போய்க் கொண்டிருக்கிறது ஆஸ்திரேலியாவும் இதே நிலையில்தான் உள்ளது... எப்படியோ இருக்கும் இருப்பை வைத்து நிர்வகிக்கப்படுகிறது. பிரிட்டன் பிரதமர் ஒரே மாதத்தில் ராஜினாமா செய்தார். அமெரிக்கா மிகப்பெரிய பொருளாதார மந்தநிலையின் அச்சத்தில் உள்ளது. கொரோனாவால் சீனா இன்னமும் கூட தத்தளிக்கிறது. இப்போது ரஷ்யா உக்ரைனால் ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளும் சிதறடிக்கப்பட்டுள்ளன. நமது அண்டை நாடுகளில் பெரும்பாலானவை திவாலாகிவிட்டன. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் முற்றிலும் திவாலானதால், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. இதையெல்லாம் மீறி இந்தியா மட்டும் நாளுக்கு நாள் அதிராமல் வலுப்பெற்று வருகிறது. டஜன் கணக்கான ஏவுகணை சோதனைகள், ராணுவத்தின் நவீனமயமாக்கல், விரைவு ரயில்கள், உலகையே உலுக்கும் பிரம்மாண்ட திட்டங்கள், பல விரைவு சாலைகள், ஒருவழியாக உருவாகி வரும் நெடுஞ்சாலைகள். தேச வரலாற்றில் இதுவரை கண்டிராத, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு உதவும் நூற்றுக்கணக்கான திட்டங்கள். மோடி அரசு அதை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐ஒவ்வொரு நாளும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் மோடிஜி ஒரு பெரிய திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வருகிறார். 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 திட்டங்கள் வேகமாக முடிக்கப்பட்டு வருகின்றன. எனவே இந்தியா அடுத்த 20-25 ஆண்டுகளுக்கு உலகை ஆளும். இது மோடி என்ற அசாதாரண நபரின் சாதனை.. இந்த 8 வருடங்களில் மோடிஜி இல்லை என்றால் உலகின் பெரும்பாலான நாடுகளை போல் இந்தியாவின் நிலையும் சீரழிந்திருக்கும். 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 நான் பாரத அன்னையின் நலம் விரும்புபவன். 🙏🙏🙏🙏🙏
Rate this:
Cancel
07-பிப்-202320:19:05 IST Report Abuse
srinivasan Ramesh நியூசிலாந்து பிரதமர் கண்ணீருடன் பதவியை ராஜினாமா செய்தார். காரணம் - பணமில்லை, வேலையில்லை, பொருளாதாரம் திசை தெரியாத படகு போல... போய்க்கொண்டிருக்கிறது ஆஸ்திரேலியாவும் இதே நிலையில்தான் உள்ளது... எப்படியோ இருக்கும் இருப்பை வைத்து நிர்வகிக்கப்படுகிறது. பிரிட்டன் பிரதமர் ஒரே மாதத்தில் ராஜினாமா செய்தார். அமெரிக்கா மிகப்பெரிய பொருளாதார மந்தநிலையின் அச்சத்தில் உள்ளது. கொரோனாவால் சீனா இன்னமும் கூட தத்தளிக்கிறது. இப்போது ரஷ்யா உக்ரைனால் ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளும் சிதறடிக்கப்பட்டுள்ளன. நமது அண்டை நாடுகளில் பெரும்பாலானவை திவாலாகிவிட்டன. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் முற்றிலும் திவாலானதால், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. இதையெல்லாம் மீறி இந்தியா மட்டும் நாளுக்கு நாள் அதிராமல் வலுப்பெற்று வருகிறது. டஜன் கணக்கான ஏவுகணை சோதனைகள், ராணுவத்தின் நவீனமயமாக்கல், விரைவு ரயில்கள், உலகையே உலுக்கும் பிரம்மாண்ட திட்டங்கள், பல விரைவு சாலைகள், ஒருவழியாக உருவாகி வரும் நெடுஞ்சாலைகள். தேச வரலாற்றில் இதுவரை கண்டிராத, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு உதவும் நூற்றுக்கணக்கான திட்டங்கள். மோடி அரசு அதை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐ஒவ்வொரு நாளும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் மோடிஜி ஒரு பெரிய திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வருகிறார். 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 திட்டங்கள் வேகமாக முடிக்கப்பட்டு வருகின்றன. எனவே இந்தியா அடுத்த 20-25 ஆண்டுகளுக்கு உலகை ஆளும். இது மோடி என்ற அசாதாரண நபரின் சாதனை.. இந்த 8 வருடங்களில் மோடிஜி இல்லை என்றால் உலகின் பெரும்பாலான நாடுகளை போல் இந்தியாவின் நிலையும் சீரழிந்திருக்கும். 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 நான் பாரத அன்னையின் நலம் விரும்புபவன். 🙏🙏🙏🙏🙏
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
07-பிப்-202317:26:29 IST Report Abuse
J.V. Iyer அருமை... பாஜக ஆளும் எல்லா மாநிலங்களும் வேகமாக முன்னேறி வருகின்றன. தமிழகம் மட்டும் கடலில் பேனா வைப்பதும், பெருங்காயத்தை கரைப்பதுமாக இருக்கிறது. அலுமினிய கொலுசுக்கு இவ்வளவு மதிப்பா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X