10 கி.மீ., தூரம் காரில் இழுத்துச் செல்லப்பட்ட மனித உடல்: உத்தரபிரதேசத்தில் பயங்கரம்

Updated : பிப் 07, 2023 | Added : பிப் 07, 2023 | கருத்துகள் (12) | |
Advertisement
மதுரா : உத்தரபிரதேச மாநிலத்தில், கார் ஒன்றில், 10 கி.மீ., துாரத்துக்கு, மனித உடல் அடித்து இழுக்கப்பட்டு வந்த, சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.உத்தரபிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவையும், ஆக்ராவையும் இணைக்கும் யமுனா விரைவுச்சாலையில், இன்று (பிப்.,7)ம் தேதி கார் ஒன்றில் மனித உடல் அடித்து இழுக்கப்பட்டு வருவதை, மதுரா சுங்கச்சாவடி காவலர் ஒருவர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரா : உத்தரபிரதேச மாநிலத்தில், கார் ஒன்றில், 10 கி.மீ., துாரத்துக்கு, மனித உடல் அடித்து இழுக்கப்பட்டு வந்த, சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.




latest tamil news


உத்தரபிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவையும், ஆக்ராவையும் இணைக்கும் யமுனா விரைவுச்சாலையில், இன்று (பிப்.,7)ம் தேதி கார் ஒன்றில் மனித உடல் அடித்து இழுக்கப்பட்டு வருவதை, மதுரா சுங்கச்சாவடி காவலர் ஒருவர் பார்த்துள்ளார்.


அவர், கொடுத்த தகவலின்படி, டேஹாட் எஸ்.பி., ட்ரைகன் பைசன் தலைமையிலான போலீசார், உடலை மீட்டு, கார் ஓட்டுனரை பிடித்து விசாரிக்கின்றனர். போலீசார் விசாரணையில், காரை ஓட்டி வந்தவர், புதுடில்லியைச் சேர்ந்த, வீரேந்திர சிங் என, தெரியவந்துள்ளது.



latest tamil news


எஸ்.பி., ட்ரைகன் பைசன் கூறுகையில்,' நேற்று இரவு சாலையில் நிலவிய மூடுபனியால், காரில் அடிபட்டு இறந்தவர் யார் என, தெரியவில்லை என, வீரேந்திர சிங் கூறியுள்ளார், இதையடுத்து, இறந்தவரின் அடையாளத்தை காண, கார் வந்த பாதையில் உள்ள, சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்,' என்றார்.


கடந்த, ஜனவரி மாதம், 20 வயது இளம்பெண் அஞ்சலி சிங் என்பவர், டில்லி, சுல்தான்புரியில் இருந்து காஞ்ஹாவாலா வரை, 12 கி.மீ., துாரத்துக்கு, காரில் அடித்து இழுத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். தற்போது, அதேபோல் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

Sureshkumar - Coimbatore,இந்தியா
08-பிப்-202309:13:36 IST Report Abuse
Sureshkumar கார் ஓட்டுனருக்கு ஓட்டும்போது கூடவா தெரியல ,
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
07-பிப்-202321:10:01 IST Report Abuse
g.s,rajan இந்தியாவில் தரமான சாலைகளால் தான் விபத்துக்கள் மற்றும் உயிர் இழப்புக்கள் அதிகமாக ஏற்படுகிறது என்று மத்தியில் ஆளுங்கட்சியில் உள்ள ஒரு தீர்க்கதரிசி சில நாட்களுக்கு முன் கூறினார் ,அது இப்போ நூற்றுக்கு நூறு உண்மையாகிவிட்டது....
Rate this:
Cancel
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
07-பிப்-202319:52:27 IST Report Abuse
Paraman மாட்டு வண்டி ஒட்டிக்கிட்டு இருந்த காட்டுமிராண்டி கும்பல்களுக்கு அதிவேக கார்கள் ஓட்டும் நிலை ஏற்பட்டால் இதுதான் அதன் பின்விளைவு ஈனப்பிறவியான வெள்ளையன் நம்மை காட்டுமிராண்டிகள். மாட்டுவண்டி ஒட்டித்தான் லாயக்கு என்று சொன்னதை நிரூபிக்கிறோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X