ஆவடி, ஆவடி எச்.வி.எப்., எஸ்டேட் குடியிருப்பில் வசித்து வந்தவர் விநாயகம், 46; எச்.வி.எப்., ஊழியர். இவருக்கு மனைவி மற்றும் இருமகள்கள் உள்ளனர்.
குடிபோதைக்கு அடிமையான இவர், நேற்று முன்தினம் இரவு மது அருந்தி படுக்க சென்றர்.
மறுநாள் காலை அவரது மனைவி பார்க்கும்போது, இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
தகவலறிந்த டேங்க் பேக்டரி போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement