30 civilians and 31 soldiers were killed in Kashmir | காஷ்மீரில் 30 பொதுமக்கள் 31 வீரர்கள் கொல்லப்பட்டனர்| Dinamalar

காஷ்மீரில் 30 பொதுமக்கள் 31 வீரர்கள் கொல்லப்பட்டனர்

Updated : பிப் 08, 2023 | Added : பிப் 08, 2023 | கருத்துகள் (2) | |
புதுடில்லி, ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 2022ல் ௩௦ பொதுமக்கள், ௩௧ பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.இது குறித்து, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், லோக் சபாவில் அளித்த பதில்:மத்திய அரசு, பயங்கரவாதத்தை எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ளாத கொள்கையை வைத்துள்ளதால், ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு சூழலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
30 civilians and 31 soldiers were killed in Kashmir  காஷ்மீரில் 30 பொதுமக்கள் 31 வீரர்கள் கொல்லப்பட்டனர்

புதுடில்லி, ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 2022ல் ௩௦ பொதுமக்கள், ௩௧ பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இது குறித்து, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், லோக் சபாவில் அளித்த பதில்:மத்திய அரசு, பயங்கரவாதத்தை எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ளாத கொள்கையை வைத்துள்ளதால், ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு சூழலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.


latest tamil news


இங்கு,2021ல், 41 பொதுமக்கள், 42 பாதுகாப்புப் படை வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்; 192 பேர் காயமடைந்தனர்.

கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை குறைந்து 30 பொதுமக்கள், 31 பாதுகாப்புப் படை வீரர்கள் மட்டுமே கொல்லப்பட்டனர்; 221 பேர் காயமடைந்தனர். இந்த ஆண்டின் முதல் மாதத்தில், பொதுமக்கள் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 23 பேர் காயமடைந்தனர்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X