''அமைச்சர் திறந்து வச்ச ரத்த வங்கி, சும்மா பெயரளவுக்கு தான் செயல்படுதாம் வே...'' என அரட்டையை ஆரம்பித்த அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன், சேலம் மாவட்டம் ஓமலுார் தாலுகா மருத்துவமனையில, புதுசா ரத்த வங்கியை சமீபத்துல திறந்து வச்சாருல்லா...
''இந்த ரத்த வங்கியில, ரத்தத்தை இருப்பு வச்சு மட்டும் தான் பயன்படுத்த முடியுமாம்... 'நான் ரத்தம் கொடுக்குதேன்'னு யாராவது முன்வந்தா, அவங்ககிட்ட ரத்தத்தை தானமா பெற்று பயன்படுத்தும் வசதி வரல வே...
![]()
|
''அந்த வசதிக்கு விண்ணப்பிச்சு, 15 நாள் தான் ஆகுது... அதோட ரத்த வங்கியில வேலை பாக்குற டாக்டர், ரெண்டு நர்ஸ்களுக்கு இன்னும் பயிற்சி கொடுக்கல வே...
''இப்படி எந்த வேலையுமே முழுசா முடியாத நிலையில தான், அமைச்சர் வந்து அவசர கதியில ரத்த வங்கியை திறந்துவச்சிட்டு போயிட்டாரு...
''இங்கன ரத்த தான முகாம் நடத்தி, ரத்தத்தை சேமிச்சு வச்சு பயன்படுத்தும் நிலைக்கு, இந்த ரத்த வங்கி எப்ப வருமுன்னு அங்க வேலை பார்க்குற டாக்டர்களுக்கே தெரியல வே...'' என்றார் அண்ணாச்சி.