அதானி நிறுவனங்களில் எல்.ஐ.சி., முதலீடு: பார்லிமென்டில் மத்திய அரசு விளக்கம்

Added : பிப் 08, 2023 | கருத்துகள் (14) | |
Advertisement
புதுடில்லி : அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் முறையாக பின்பற்றியே அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக எல்.ஐ.சி., எனப்படும் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் கூறியுள்ளதாக, ராஜ்யசபாவில்தெரிவிக்கப்பட்டது.அதானி குழுமம் பங்குச் சந்தை வர்த்தகத்தில் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக, அமெரிக்காவைச் சேர்ந்த 'ஹிண்டன்பர்க்' நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில்
LIC, Adani Group, SBI, Parliament, State Bank of India,அதானி,எல்ஐசி, முதலீடு,பார்லிமென்ட், மத்திய அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் முறையாக பின்பற்றியே அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக எல்.ஐ.சி., எனப்படும் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் கூறியுள்ளதாக, ராஜ்யசபாவில்தெரிவிக்கப்பட்டது.


அதானி குழுமம் பங்குச் சந்தை வர்த்தகத்தில் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக, அமெரிக்காவைச் சேர்ந்த 'ஹிண்டன்பர்க்' நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங் குகளின் மதிப்பு கடுமையாக சரிந்தது.


இந்நிலையில், எல்.ஐ.சி., எனப்படும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம், அதானி குழுமத்தில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளதாகவும், அது பெரும் இழப்பை சந்தித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாயின.


இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், 'எல்.ஐ.சி.,யின் மொத்த சொத்து மதிப்பு 41.66 லட்சம் கோடி ரூபாயாகும். இதில், 35 ஆயிரத்து 917 கோடி ரூபாய், அதாவது 0.975 சதவீதம் மட்டுமே அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது' என, எல்.ஐ.சி., தெரிவித்திருந்தது.


latest tamil news

இது தொடர்பாக பா.ஜ.,வைச் சேர்ந்த சுஷில் குமார் மோடி கேட்ட கேள்விக்கு, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கராட், ராஜ்யசபாவில் எழுத்துபூர்வமாக நேற்று தாக்கல் செய்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:


காப்பீட்டு சட்டம், காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணைய வழி காட்டுதல்கள் மற்றும் நிறுவனத்தின் நிர்வாக நடைமுறைகள் முறையாக பின்பற்றியே, பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப் படுவதாக எல்.ஐ.சி., நிறுவனம் தெரிவித்துள்ளது.


தன் முதலீடுகள் தொடர்பாக நிறுவனத்தின் இணையதளத்தில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் எல்.ஐ.சி., குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (14)

g.s,rajan - chennai ,இந்தியா
08-பிப்-202318:44:39 IST Report Abuse
g.s,rajan எல்.ஐ.சி யையே சாகடிக்கப் போறாங்க .
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
08-பிப்-202313:16:14 IST Report Abuse
duruvasar புறம் கூறுவதை முழுநேர தொழிலாக வைத்துக்கொண்டுள்ள உபிஸ்கள் எத்தனை தரவுகள் கொடுத்தாலும் படிக்காமல் கருத்து போட்டுக்கொண்டேதான் இருப்பார்கள் . எல்லாம் 299 ரூபாய் செய்கிற வேலை
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
08-பிப்-202312:10:56 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அதானி குழுமத்தின் மேல் ஏன் செபியோ, இல்லை அமலாக்கத் துறைகளோ நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லையே, ஏன்? செபியின் உள்-வியாபாரம் (Insider trading) பற்றி நடவடிக்கை எடுக்கும் கமிட்டியில் அதானியின் சம்பந்தி (அதானி மகனின் மாமனார்) சேர்க்கப்பட்டுள்ளார் என்பது ஒரு அறிய தகவல். அது எப்படிப்பட்ட மோசடி என்று விளக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X