சிறுமியிடம் அத்துமீறல் வழக்கில் முஸ்லிம் மத போதகருக்கு சிறை

Added : பிப் 08, 2023 | |
Advertisement
புதுடில்லி : பாடம் படிக்க வந்த 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கில், முஸ்லிம் மத போதகருக்கான ஆறு ஆண்டு சிறை தண்டனையை புதுடில்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.புதுடில்லியின் புராரி பகுதியைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் மத போதகருக்கு எதிராக, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது. தன்னிடம் படிக்க வந்த, 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக



புதுடில்லி : பாடம் படிக்க வந்த 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கில், முஸ்லிம் மத போதகருக்கான ஆறு ஆண்டு சிறை தண்டனையை புதுடில்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.



புதுடில்லியின் புராரி பகுதியைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் மத போதகருக்கு எதிராக, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது.

தன்னிடம் படிக்க வந்த, 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவர் மீது, ௨௦௧௬ செப்.,ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அவருக்கு ஆறு ஆண்டு சிறை தண்டனை விதித்து கீழ் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த புதுடில்லி உயர் நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

முஸ்லிம்கள் புனிதமாக கருதும் குரான் குறித்து படிக்க வந்த சிறுமியிடம், மதபோதகர் அத்துமீறி நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மத போதகர் என்பவர் சமூகத்தில் உயர்வாக கருதப்படுபவர்.

இதுபோன்ற கீழ்தரமான செய்கையில் ஈடுபட்டவருக்கு எந்தச் சலுகையும் வழங்க முடியாது. கீழ் நீதிமன்றம் அளித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X