வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: பெண்கள் சொந்த காலில் நிற்பதற்காக சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டன என சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து உயா் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் 'புதுமைப்பெண்' திட்டத்தை முதல்வா் ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 5 ம் தேதி துவக்கி வைத்தார். இதன் மூலமாக தற்போது உயர்கல்வி பயிலும் 1.13 லட்சம் மாணவியர் இந்தத் திட்டத்தில் உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுமைப்பெண் திட்டத்தின் 2ம் கட்டத்தை திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் ஹிந்து கல்லூரியில் நடைபெறும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் இன்று(பிப்., 08) துவக்கி வைத்தார்.
பின் அவர் பேசியதாவது: புதுமைப்பெண் திட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: உயர்கல்வியில் மாணவிகளின் சேர்க்கை அதிகரித்துள்ளது. பெண்களுக்கு கல்வி மிக மிக முக்கியம். போலீஸ் துறையில் நேற்று பணி நியமனம் பெற்ற 17 பேரில் 13 பேர் பெண் டிஎஸ்பிக்கள். அனைவரும் சமம். அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.

திராவிட இயக்க வரலாறு ஒரு போராட்ட வரலாறு, அதுவே தமிழகத்தின் வரலாறு. கல்வியை அனைவருக்கும் சமமானதாக ஆக்க முயற்சி செய்து வருகிறோம். திமுக ஆட்சியில் தான் பெண்களுக்கு சொத்துரிமை, இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் பெண்கள் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
மூட நம்பிக்கையால் முடக்கப்பட்டிருந்த பெண்களுக்காக போராடியவர் ராமாமிர்தம் அம்மையார். பள்ளி கல்வியை முடிக்கும் மாணவிகள், கண்டிப்பாக உயர்கல்வியை தொடரவே இந்த திட்டம். பெண்கள் சொந்த காலில் நிற்பதற்காக சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டன. புதுமைப்பெண் திட்டம் மூலம், பொருளாதார நெருக்கடியில் இருந்த பெண்கள் கல்வியை தொடர்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.