பெண்கள் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் தருவது திமுக ஆட்சி: ஸ்டாலின் பேச்சு

Updated : பிப் 08, 2023 | Added : பிப் 08, 2023 | கருத்துகள் (14) | |
Advertisement
சென்னை: பெண்கள் சொந்த காலில் நிற்பதற்காக சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டன என சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து உயா் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் 'புதுமைப்பெண்' திட்டத்தை முதல்வா் ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 5 ம் தேதி துவக்கி வைத்தார். இதன் மூலமாக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: பெண்கள் சொந்த காலில் நிற்பதற்காக சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டன என சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.




latest tamil news


தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து உயா் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் 'புதுமைப்பெண்' திட்டத்தை முதல்வா் ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 5 ம் தேதி துவக்கி வைத்தார். இதன் மூலமாக தற்போது உயர்கல்வி பயிலும் 1.13 லட்சம் மாணவியர் இந்தத் திட்டத்தில் உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர்.


இந்நிலையில் புதுமைப்பெண் திட்டத்தின் 2ம் கட்டத்தை திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் ஹிந்து கல்லூரியில் நடைபெறும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் இன்று(பிப்., 08) துவக்கி வைத்தார்.


பின் அவர் பேசியதாவது: புதுமைப்பெண் திட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: உயர்கல்வியில் மாணவிகளின் சேர்க்கை அதிகரித்துள்ளது. பெண்களுக்கு கல்வி மிக மிக முக்கியம். போலீஸ் துறையில் நேற்று பணி நியமனம் பெற்ற 17 பேரில் 13 பேர் பெண் டிஎஸ்பிக்கள். அனைவரும் சமம். அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.



latest tamil news


திராவிட இயக்க வரலாறு ஒரு போராட்ட வரலாறு, அதுவே தமிழகத்தின் வரலாறு. கல்வியை அனைவருக்கும் சமமானதாக ஆக்க முயற்சி செய்து வருகிறோம். திமுக ஆட்சியில் தான் பெண்களுக்கு சொத்துரிமை, இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் பெண்கள் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.


மூட நம்பிக்கையால் முடக்கப்பட்டிருந்த பெண்களுக்காக போராடியவர் ராமாமிர்தம் அம்மையார். பள்ளி கல்வியை முடிக்கும் மாணவிகள், கண்டிப்பாக உயர்கல்வியை தொடரவே இந்த திட்டம். பெண்கள் சொந்த காலில் நிற்பதற்காக சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டன. புதுமைப்பெண் திட்டம் மூலம், பொருளாதார நெருக்கடியில் இருந்த பெண்கள் கல்வியை தொடர்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (14)

ram -  ( Posted via: Dinamalar Android App )
08-பிப்-202320:58:25 IST Report Abuse
ram தினமலரே .. இந்த செய்தியை எடுத்திடுங்க.. இதை பார்க்க பார்க்க இவனுங்க மேலே கோபமா வருது.
Rate this:
Cancel
ram -  ( Posted via: Dinamalar Android App )
08-பிப்-202320:55:24 IST Report Abuse
ram நீ பெண்மை பத்தி பேசுறே.. வாயிலே நல்லா வந்தீடப்போகுது.. மூடிக்கிட்டு போயிடு..
Rate this:
Cancel
ram -  ( Posted via: Dinamalar Android App )
08-பிப்-202320:51:31 IST Report Abuse
ram . உன்னோட லட்சனம் பெண் காவலர் விஷயத்துலே தெரிவாக்கிட்டியே.. எப்படி இப்படியெல்லாம் வெட்கமே இல்லாமல் பேசுறே..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X