ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக மத்திய அரசு சட்டம் கொண்டு வரும்: அஷ்வினி வைஷ்ணவ்

Updated : பிப் 08, 2023 | Added : பிப் 08, 2023 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி: ஆன்லைன் தொடர்பாக மத்திய அரசு சட்டம் கொண்டு வருவதே சரியாக இருக்கும் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார்.லோக்சபாவில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்படுமா? ஆன்லைன் விளையாட்டு பற்றிய வரைவு விதிகளில் ஆன்லைன் சூதாட்டம் இடம்பெறாதது ஏன்? . ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் இதுவரை அனுமதி வழங்கவில்லை.

புதுடில்லி: ஆன்லைன் தொடர்பாக மத்திய அரசு சட்டம் கொண்டு வருவதே சரியாக இருக்கும் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார்.



latest tamil news


லோக்சபாவில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்படுமா? ஆன்லைன் விளையாட்டு பற்றிய வரைவு விதிகளில் ஆன்லைன் சூதாட்டம் இடம்பெறாதது ஏன்? . ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் இதுவரை அனுமதி வழங்கவில்லை. தமிழகத்தில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது?. என தமிழச்சி தங்கபாண்டியன் திமுக எம்.பி கேள்வி எழுப்பினார்.


இதற்கு மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதில் அளித்து பேசியதாவது: ஏற்கனவே 19 மாநிலங்கள் ஆன்லைன் விளையாட்டு தொடர்பான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களுமக முன்வந்தால் தேசிய அளவில் தடை மசோதா குறித்து அரசு ஆலோசிக்கும். தமிழக கவர்னர் மசோதாவை கிடப்பில் போட்டியிருப்பது குறித்த கருத்து கூற இயலாது. ஆன்லைன் தொடர்பாக மத்திய அரசு சட்டம் கொண்டு வருவதே சரியாக இருக்கும்.



latest tamil news


அனைத்து மாநில அரசுகளுடன் ஆலோசித்து ஒருமித்த கருத்தை எட்டிய பிற்கு ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குப்படுத்த கடுமையான சட்டம் கொண்டு வரப்படும். ஆன்லைன் விளையாட்டு, ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்தே உள்ளோம். இவ்வாறு அவர் பதிலளித்து பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

08-பிப்-202322:19:58 IST Report Abuse
அப்புசாமி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய முடியாது. இவிங்க தடை செஞ்சாலும் ப்ளாஸ்டிக்கிற்கு போட்ட தடை மாதிரி தோல்வியுறும். இன்னும் சில வருடங்களில் கஞ்சா கூட லீகல் ஆயிடும். அதுதான் டிரெண்டு.
Rate this:
Cancel
Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா
08-பிப்-202319:08:16 IST Report Abuse
Pats, Kongunadu, Bharat, Hindustan முதலில் டாஸ்மாக்கில் குடித்து சீரழிந்த குடும்பங்களுக்கு குன்றிய முதல்வரிடம் நஷ்டஈடு கேளுங்கள். ஆன்லைன் விளையாட்டுகளுக்கு payment gateway மூலம் பணம் செலுத்தும் முறையை தடை செய்தாலே போதும். மூடுவிழா தானே நடக்கும்.
Rate this:
Cancel
08-பிப்-202318:35:56 IST Report Abuse
ஆரூர் ரங் அரசியல் சட்டப்படி ரம்மி ஆட்டத்தை அது ஒரு திறன் சார்ந்த விளையாட்டு என்பதால் தடை செய்ய முடியாது என கோர்ட் தீர்ப்பு கூறிவிட்டது. அயிப்படி இருக்கையில் ஆன்லைனில் அதே விளையாட்டை எப்படித் தடை செய்ய முடியும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X