முத்தான சத்துக்கள் நிறைந்த முளைகட்டிய பயறு தோசை

Updated : பிப் 08, 2023 | Added : பிப் 08, 2023 | |
Advertisement
தானியங்கள், பருப்பு வகைகளை முளைக்கட்டும்போது ஊட்டச்சத்து மதிப்பு மேலும் அதிகரிக்கிறது. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் முளைக்கட்டிய பயறுகளுக்கு முக்கிய இடம் உண்டு. இதில், நார்ச்சத்து, இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் பி, சி உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இவை உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. எனவே, முளைக்கட்டிய பயறு தோசை
sprouteddosa, dosa, sprouts, healthyfood, healthy, food, recipes, உணவு, ரெசிபி, உணவுக்குறிப்புகள், முளைக்கட்டிய பயறுகள், முளைக்கட்டியபயறுதோசை,

தானியங்கள், பருப்பு வகைகளை முளைக்கட்டும்போது ஊட்டச்சத்து மதிப்பு மேலும் அதிகரிக்கிறது. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் முளைக்கட்டிய பயறுகளுக்கு முக்கிய இடம் உண்டு. இதில், நார்ச்சத்து, இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் பி, சி உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இவை உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. எனவே, முளைக்கட்டிய பயறு தோசை ரெசிபி இதோ...



தேவையானப் பொருட்கள்:


கருப்பு சுண்டல் : 1/2 கப்

பாசிப்பயறு : 1/2 கப்

வெள்ளை சுண்டல் : 1/2 கப்

பச்சை மிளகாய் : 1

சீரகம் : 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் : 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை : 2 கொத்து

குருமிளகு : 1/4 டீஸ்பூன்

சின்ன வெங்காயம் : ஒரு கைப்பிடி

இஞ்சி : 2 இன்ச் அளவு

கொத்தமல்லி இலை : ஒரு கைப்பிடி

உப்பு, சமையல் எண்ணெய் : தேவையான அளவு

ராகி மாவு : 2 டேபிள் ஸ்பூன்


latest tamil news



எப்படிச் செய்வது?


முதல் நாள் காலையில் பாசிப்பயறு மற்றும் சுண்டலை நன்றாக ஓரிரு முறைக் கழுவி, சுத்தமான தண்ணீரில் எட்டு முதல் 10 மணி நேரத்துக்கு ஊற வைக்கவும். பின், தண்ணீரை வடித்துவிட்டு, ஊறிய பயறுகளை ( ஸ்டெய்னர்) வடிகட்டி போன்ற பாத்திரத்தில் வைத்து, மேலே காட்டன் துணியால் மூடி நல்ல காற்றோட்டமான இடத்தில் வைக்கவும். அல்லது கிராமத்து ஸ்டைலில் காட்டன் துணியில் பயறை இறுக்கமாக கட்டி வைக்கலாம். துணியின் மீது சிறிது தண்ணீர் தெளித்து விட வேண்டும்.

மறு நாள் காலையில், அதாவது 10 மணி நேரம் கழித்துப் பார்த்தால் பாசிப்பயறு மட்டுமே சிறிதளவு முளைவிட்டிருக்கும். அவற்றை சுத்தமான தண்ணீரில் கழுவி, மீண்டும் காட்டன் துணியால் மூடி காற்றோட்டமான இடத்தில் வைக்கவும். மாலையில் மீண்டும் இதேப்போன்று செய்ய வேண்டும். அதேப்போல், காட்டன் துணியையும் ஈரப்பதமாக்கி மூடி வைக்க வேண்டும். மூன்று நாட்கள் கழித்து பயறுகள் நன்றாக முளை விட்டிருக்கும்.


latest tamil news


மிக்சி ஜாரில் முளைக்கட்டிய பயறுகள், சீரகம், மஞ்சள் தூள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொரகொரப்பாக இடித்த குருமிளகு, இஞ்சி, சிறிய வெங்காயம், கொத்தமல்லி இலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.

அரைத்த மாவை ஒரு பவுலுக்கு மாற்றி, அதனுடன் ராகி மாவை சேர்த்து கலக்கவும். மாவை புளிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை. கடாயில் மாவை ஊற்றி எண்ணெய் சேர்த்து இருப்பக்கமும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால் சுவையான, ஆரோக்கியமான முளைக்கட்டிய பயறு தோசை ரெடி. வழக்கமான தோசையை விட கலராக இருப்பதால் குட்டீஸ்கள் விரும்பிச்சாப்பிடுவர்; முளைகட்டிய பயறுகளால் ஆரோக்கியமும் மேம்படும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X