வனப்பாதுகாப்பு ஓவியப்போட்டி; மாணவர்கள் பங்கேற்பு

Added : பிப் 08, 2023 | |
Advertisement
உடுமலை : கொமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடந்தது.ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை மற்றும் கொழுமம் வனச்சரகம் சார்பில் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.அவ்வகையில், உடுமலை அடுத்த கொமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 'வனப்பாதுகாப்பு மற்றும் ஈரநிலம்' என்ற தலைப்பில் ஓவியம் மற்றும் கட்டுரைப்போட்டி
 வனப்பாதுகாப்பு ஓவியப்போட்டி; மாணவர்கள் பங்கேற்பு



உடுமலை : கொமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடந்தது.

ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை மற்றும் கொழுமம் வனச்சரகம் சார்பில் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அவ்வகையில், உடுமலை அடுத்த கொமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 'வனப்பாதுகாப்பு மற்றும் ஈரநிலம்' என்ற தலைப்பில் ஓவியம் மற்றும் கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டது.

வனவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் மாரியப்பன் போட்டிகளைத் துவக்கி வைத்தார்.

இப்போட்டியில், முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவர்கள், தாலுகா அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர் என, தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர்கள் மாரிமுத்து, மயில்சாமி, மதன்குமார் ஆகியோர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X