உடுமலை : கொமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடந்தது.
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை மற்றும் கொழுமம் வனச்சரகம் சார்பில் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், உடுமலை அடுத்த கொமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 'வனப்பாதுகாப்பு மற்றும் ஈரநிலம்' என்ற தலைப்பில் ஓவியம் மற்றும் கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டது.
வனவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் மாரியப்பன் போட்டிகளைத் துவக்கி வைத்தார்.
இப்போட்டியில், முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவர்கள், தாலுகா அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர் என, தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர்கள் மாரிமுத்து, மயில்சாமி, மதன்குமார் ஆகியோர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.