பூட்டிய கடையில் பணம் திருட்டு

Added : பிப் 08, 2023 | |
Advertisement
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், விடையூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் வசந்தகுமார், 25. இவர், தன் உறவினரான விஜயகுமார் என்பவர் கடம்பத்துார் ராஜாஜி சாலையில் நடத்தி வரும் பணம் பரிமாற்றம் செய்யும் கடையை நிர்வாகம் செய்து வருகிறார்.இவர் கடந்த 6ம் தேதி, கடையை பூட்டி விட்டு சென்று விட்டார். பின், மறுநாள் காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டுகள் உடைந்து கிடந்தது கண்டு

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், விடையூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் வசந்தகுமார், 25.

இவர், தன் உறவினரான விஜயகுமார் என்பவர் கடம்பத்துார் ராஜாஜி சாலையில் நடத்தி வரும் பணம் பரிமாற்றம் செய்யும் கடையை நிர்வாகம் செய்து வருகிறார்.

இவர் கடந்த 6ம் தேதி, கடையை பூட்டி விட்டு சென்று விட்டார். பின், மறுநாள் காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டுகள் உடைந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தர்.

பின் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த 75 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து வசந்தகுமார் அளித்த புகாரையடுத்து, கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X