சிறார் இல்லத்தில் 2 சிறுவர்கள் தப்பியோட்டம்

Added : பிப் 08, 2023 | |
Advertisement
செங்கல்பட்டு:செங்கல்பட்டு சமூக நலத்துறையின் கீழ், அரசு சிறப்பு இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில், சிறார் கைதிகள் மற்றும் தண்டனை பெற்ற சிறுவர்கள் அடைக்கப்படுவது வழக்கம்.இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் ஐயப்பன், 18, என்பவர், திருட்டு வழக்கில், இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்றவர்.இதேபோன்று, கடலுார் மாவட்டம் விருத்தாச்சலம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு சமூக நலத்துறையின் கீழ், அரசு சிறப்பு இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில், சிறார் கைதிகள் மற்றும் தண்டனை பெற்ற சிறுவர்கள் அடைக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் ஐயப்பன், 18, என்பவர், திருட்டு வழக்கில், இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்றவர்.

இதேபோன்று, கடலுார் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியைச் சேர்ந்த, 17 வயது சிறுவன், திருட்டு வழக்கில், மூன்று ஆண்டுகள் தண்டனை பெற்றவர். இவர்களை, மேற்கண்ட இல்லத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

அதன்பின், இல்லத்தில் இருந்து இரண்டு சிறுவர்களும், நேற்று தப்பிச் சென்றனர். இதுகுறித்து, செங்கல்பட்டு நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X