சென்னை:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
திருவள்ளூர், பொன்னேரி, வேண்பாக்கத்தில், மின் வாரியத்திற்கு 33 / 11 கிலோ வோல்ட் திறனில் துணைமின் நிலையம் உள்ளது.
அந்த வளாகத்தில் உள்ள பொன்னேரி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை, காலை 11:00 மணிக்கு மின் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
அதில், பொன்னேரி மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் வசிப்போர் பங்கேற்று மின்சாரம் தொடர்பான குறைகளை மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து பயன் பெறலாம்.