முதுகுளத்துார்-முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு கட்டடம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதால் மாணவர்கள், பணியாளர்கள் அச்சமடைந்துஉள்ளனர்.
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தூரி, மேலச்சாக்குளம், ஏனாதி, முதுகுளத்தூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு சத்துணவு கட்டடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
முறையாக பராமரிப்பின்றி தற்போது கட்டடம் ஆங்காங்கே சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. சிமென்ட் பூச்சுகள் அவ்வப்போது பெயர்ந்து விழுவதால் சமையல் பணியாளர்கள் அச்சப்படுகின்றனர். இதனால் சத்துணவு பொருட்கள் வாங்க வரும் மாணவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர்.
பெற்றோர் கூறுகையில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சத்துணவு கட்டடம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதால் மாணவர்கள்அச்சப்படுகின்றனர். அசம்பாவிதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.