விழுப்புரம்-விழுப்புரத்தில் நில அளவை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாலை நேர தர்ணா போராட்டம் நடந்தது.
விழுப்புரம் புதிய பஸ் நிலைய நகராட்சி திடலில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கத்தினர் 26 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட தர்ணாவில் ஈடுபட்டனர்.
மாவட்டத் தலைவர் மகேஸ்வரன் தலைமை தாங்கினார். செயலாளர் திருநாவுக்கரசு, துணை தலைவர் ஹரிபிரசாத், பொருளாளர் ராஜேஷ், இணை செயலாளர் ராம்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
வட்டங்கள் தோறும் நில அளவை களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைத்திட வேண்டும், நில அளவையில், உட்பிரிவு செய்ய முடியாத மனுக்களின் மீது, கூட்டுப்பட்டா பரிந்துரை வழங்க வேண்டும்.
இத்துறையில், நில அளவர் முதல் கூடுதல் இயக்குனர் வரை உள்ள காலி பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும், தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும்.
அனைத்து வட்டங்களுக்கும் ஒரு ஜி.பி.எஸ்., கருவி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர்.