முதல்வர் வருகை எதிரொலி ஆவடியில் சாலைகள் 'பளிச்'

Added : பிப் 08, 2023 | |
Advertisement
ஆவடி, ஆவடி மாநகராட்சி பகுதியில் உள்ள, சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, பல மாதங்களாக பராமரிக்கப்படாமல் மணல் படிந்து காணப்பட்டது.இதனால், இருசக்கர வாகனத்தில் செல்வோர், தினமும் கண்ணில் துாசி விழுந்து பெரும் அவதிப்பட்டனர். இது குறித்து, பல புகார்கள் எழுந்தும், நெடுஞ்சாலைத் துறையினர் கண்டுகொள்ளாமல் இருந்தனர்.இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் 'புதுமைப்பெண் - 2ம்' கட்ட
 முதல்வர் வருகை எதிரொலி ஆவடியில் சாலைகள் 'பளிச்'



ஆவடி, ஆவடி மாநகராட்சி பகுதியில் உள்ள, சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, பல மாதங்களாக பராமரிக்கப்படாமல் மணல் படிந்து காணப்பட்டது.

இதனால், இருசக்கர வாகனத்தில் செல்வோர், தினமும் கண்ணில் துாசி விழுந்து பெரும் அவதிப்பட்டனர். இது குறித்து, பல புகார்கள் எழுந்தும், நெடுஞ்சாலைத் துறையினர் கண்டுகொள்ளாமல் இருந்தனர்.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் 'புதுமைப்பெண் - 2ம்' கட்ட திட்டத்தை துவங்கி வைக்க, ஆவடி அடுத்த, பட்டாபிராம், இந்து கல்லுாரிக்கு நேற்று வந்தார்.

அவர் வருவதையொட்டி, திருமுல்லைவாயல் முதல் விழா நடக்கும் இந்து கல்லுாரி வரையான சாலையின் இருபுறமும் படிந்த மணலை, நெடுஞ்சாலைத் துறையினர் நேற்று முன்தினம் அதிரடியாக அகற்றி, துாய்மை பணிகள் மேற்கொண்டனர்.

இதனால் சாலை மற்றும் மைய தடுப்புகள் பளபளப்பானது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X