அருங்குன்றம் சாலையில் லாரிகளால் பள்ளம்

Added : பிப் 08, 2023 | |
Advertisement
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் பிர்காவில், ஏராளமான தனியார் கல் குவாரிகள் மற்றும் கல் அரவை தொழிற்சாலைகள் இயங்குகின்றன.இத்தொழிற்சாலைகளில் இருந்து, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு லோடு ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள், அருங்குன்றம் மற்றும் பழவேரி கிராம சாலைகள் வழியாக பல பகுதிகளுக்கு இயங்குகிறது.இதனால், இந்த சாலை எப்போதும் குண்டும், குழியுமாகவே
 அருங்குன்றம் சாலையில் லாரிகளால் பள்ளம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் பிர்காவில், ஏராளமான தனியார் கல் குவாரிகள் மற்றும் கல் அரவை தொழிற்சாலைகள் இயங்குகின்றன.

இத்தொழிற்சாலைகளில் இருந்து, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு லோடு ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள், அருங்குன்றம் மற்றும் பழவேரி கிராம சாலைகள் வழியாக பல பகுதிகளுக்கு இயங்குகிறது.

இதனால், இந்த சாலை எப்போதும் குண்டும், குழியுமாகவே உள்ளது. குறிப்பாக அருங்குன்றத்தில் இருந்து, பழவேரிக்கு பிரிந்து செல்லும் சாலை பகுதி, பழவேரி கல் அரவை தொழிற்சாலை எதிரே உள்ள சாலையில், ஆங்காங்கே மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு, குளம் போன்று காட்சி அளிக்கிறது.

இதனால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்திற்குள்ளாகி காயம் அடைகின்றனர்.

மண் புழுதி பறக்காமல் இருக்க சாலையில் தண்ணீர் ஊற்றுவதால், பழுதடைந்த பள்ளங்கள், சகதியுமாகி அச்சாலையில் வாகனங்கள் இயக்க முடியாமல், அவதிக்குள்ளாகின்றனர்.

எனவே, இப்பகுதியில், அருங்குன்றம் பகுதியில் சிமென்ட் கான்கிரீட் சாலையும், அருங்குன்றம்- பழவேரி 1 கி.மீ., துாரம் கொண்ட சாலையை, தரமான தார்ச் சாலையாக சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X