திருப்பூர்: காங்கயத்தை சேர்ந்தவர்கள் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதி. இவர்களுக்கு ரிதன் என்ற மூன்றரை வயது மகன் உள்ளார்.
கடந்த, 2ம் தேதி வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுவன் மாயமானார். புகாரின் பேரில், காங்கயம் போலீசார் மற்றும் அப்பகுதி யினர் தேடி பார்த்தனர்.
சிறுவனை கடத்தி சென்றார்களா என்ற கோணத்திலும் அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' பதிவுகளை பார்வையிட்டு தேடினர். ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை வீட்டுக்கு அருகே பி.ஏ.பி., வாய்க்கால் செல்லும் காரணத்தால், சிறுவன் அங்கு ஏதாவது சென்றாரா என்று சந்தேகத்தின் பேரில் தேட ஆரம்பித்தனர்.
சிறுவனை தேடும் பணிக்காக வாய்க்காலில் ஆங்காங்கே மதகுகள் அடைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர். இப்பணியில், 20க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.