கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எவ்வளவு? பனாரஸ் பல்கலை புது தகவல்!

Updated : பிப் 08, 2023 | Added : பிப் 08, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி,'கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைவிட, ௧௭ மடங்கு வரை அதிகமாக இருக்கும்' என, பனாரஸ் ஹிந்து பல்கலை ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.அரசின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, நம் நாட்டில், ௪.௫௦ கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலை இது தொடர்பாக ஆய்வு
 கொரோனா  பாதிப்பு,  பனாரஸ் பல்கலை  புது தகவல்!


புதுடில்லி,'கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைவிட, ௧௭ மடங்கு வரை அதிகமாக இருக்கும்' என, பனாரஸ் ஹிந்து பல்கலை ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, நம் நாட்டில், ௪.௫௦ கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலை இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது.


latest tamil news


சர்வதேச நோய் தொற்று இதழில் இந்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது:

நம் நாட்டில் கொரோனா அறிகுறிகள் தென்பட்டவர்கள் மட்டுமே பரிசோதனைகளை செய்தனர்.

இதன்படியே, அரசின் புள்ளி விபரங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ௨௦௨௦ செப்., - டிச., மாதங்களில் நாடு முழுதும் பல்வேறு நகரங்கள் உள்ளிட்ட இடங்களில் நாங்கள் ஆய்வு மேற்கொண்டோம்.

இதுவரை கொரோனா தொற்று ஏற்பட்டதில்லை என்று கூறியோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது.

அறிகுறிகள் இல்லாமல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோர் குறித்த புள்ளி விபரங்கள், அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களில் இடம்பெறவில்லை. இதன்படி பார்த்தால், அரசின் புள்ளி விபரங்களில் கூறப்பட்டுள்ளதைவிட, உண்மையாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ௧௭ மடங்கு அதிகமாக இருக்கும்.

பல்வேறு கணித அடிப்படையில் பார்க்கும்போது, உண்மையில் நம் நாட்டில் ௫௮ - ௯௮ கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும். அறிகுறிகள் இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ௨௬ - ௩௫ வயதுக்குட்பட்டோர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
09-பிப்-202311:36:01 IST Report Abuse
venugopal s இதே புள்ளி விபரங்களை அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகமோ, லயோலா கல்லூரியோ கொடுத்திருந்தால் இந்நேரம் சங்கிகள் பொங்கி எழுந்து இருந்திருப்பார்கள். ஆனால் கொடுத்தது என்னவோ பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், அதனால் இந்தப் பக்கம் எட்டிக் கூட பார்க்க மாட்டார்கள்!
Rate this:
09-பிப்-202314:43:09 IST Report Abuse
ஆரூர் ரங்அப்போ அறிகுறி இல்லாத மக்களையும் வீடுவீடாக தேடிப் பிடித்து ஐசியூ வில் வைத்து சிகிச்சை செய்திருந்தால் உமக்கு 😐மகிழ்ச்சியா?...
Rate this:
Cancel
Sampath - Chennai,இந்தியா
09-பிப்-202305:24:02 IST Report Abuse
Sampath This is secondary attack from outsiders
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X