லாரி மீது டூ வீலர் மோதி விபத்து- மாணவன் பலி

Added : பிப் 08, 2023 | கருத்துகள் (8) | |
Advertisement
சீர்காழி:சீர்காழியில் லாரி மீது டூவீலர் மோதிய விபத்தில் பிளஸ் 2 மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரசாத் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ஹரி பிரசாத் சீர்காழியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் இன்று இரவு யமஹா டூ
 லாரி மீது டூ வீலர் மோதி விபத்து- மாணவன் பலி

சீர்காழி:சீர்காழியில் லாரி மீது டூவீலர் மோதிய விபத்தில் பிளஸ் 2 மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரசாத் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ஹரி பிரசாத் சீர்காழியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் இன்று இரவு யமஹா டூ வீலர் ஒன்றில் கடைவீதிக்கு வந்துவிட்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் முன்னே சென்ற அசோக் லேலண்ட் லாரியின் பின்புறம் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்


அப்போது லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கிய ஹரி பிரசாத் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் விரைந்து வந்து ஹரிபிரசாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளது


லாரி டிரைவர் தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் பிரபாகரன் 36 என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் வாகன விபத்தில்சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Advertisement


வாசகர் கருத்து (8)

09-பிப்-202315:39:31 IST Report Abuse
சி சொர்ணரதி சின்ன பையன் கையில் வண்டி கொடுத்தது தவறு. இந்த தவறை நிறைய பெற்றோர் இன்னும் செய்கின்றனர். தயவு செய்து இந்த செய்தியை வாசித்த பிறகாவது 18 வயது பூர்த்தி ஆகாத குழந்தைகளிடம் இரு சக்கர வாகனம் ஓட்ட அனுமதிக்காதீர்கள். உங்கள் குழந்தையின் மீது நம்பிக்கை வைத்து இரு சக்கர வாகனம் தர வேண்டிய வயது 18 (லைசென்ஸ் பெற்ற பிறகு).
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
09-பிப்-202312:08:49 IST Report Abuse
தமிழ்வேள் லாரி ஓட்டுனரை கைது செய்வது முட்டாள்தனம் ....டூ வீலரை சிறுவன் ஓட்ட அனுமதியளித்த அப்பனை கைது செய்து இருக்கவேண்டும் ...ஊருக்கு இளைத்தவன் லாரி டிரைவரா ?
Rate this:
Cancel
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
09-பிப்-202311:53:25 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy இது பெற்றோருக்கான செய்தி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X