12th Kumbabhishek Maha Utsavam at Sringeri Srimalahanigareswarar Temple | சிருங்கேரி ஸ்ரீமலஹானிகரேஸ்வரர் கோவிலில் 12ம் தேதி கும்பாபிஷேக மஹா உற்சவம்| Dinamalar

சிருங்கேரி ஸ்ரீமலஹானிகரேஸ்வரர் கோவிலில் 12ம் தேதி கும்பாபிஷேக மஹா உற்சவம்

Added : பிப் 09, 2023 | |
சிருங்கேரி ஸ்ரீபவானி அம்பாள் சமேத ஸ்ரீமலஹானிகரேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேகம், வரும், 12ம் தேதி நடைபெற உள்ளது.கர்நாடகா மாநிலம், சிருங்கேரியில், ஸ்ரீசாரதா பரமேஸ்வரியை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்து, சனாதன தர்மத்தை காக்க, 1,200 ஆண்டுகளுக்கு முன், நான்கு பீடங்களின் முதன்மையான சாரதா பீடத்தை ஸ்தாபித்தார்; முதல் பீடாதிபதியாக ஸ்ரீசுரேச்வராசார்யாரை நியமித்தார்.இந்த மடத்தின்,
12th Kumbabhishek Maha Utsavam at Sringeri Srimalahanigareswarar Temple    சிருங்கேரி ஸ்ரீமலஹானிகரேஸ்வரர் கோவிலில்   12ம் தேதி கும்பாபிஷேக மஹா உற்சவம்

சிருங்கேரி ஸ்ரீபவானி அம்பாள் சமேத ஸ்ரீமலஹானிகரேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேகம், வரும், 12ம் தேதி நடைபெற உள்ளது.கர்நாடகா மாநிலம், சிருங்கேரியில், ஸ்ரீசாரதா பரமேஸ்வரியை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்து, சனாதன தர்மத்தை காக்க, 1,200 ஆண்டுகளுக்கு முன், நான்கு பீடங்களின் முதன்மையான சாரதா பீடத்தை ஸ்தாபித்தார்; முதல் பீடாதிபதியாக ஸ்ரீசுரேச்வராசார்யாரை நியமித்தார்.
இந்த மடத்தின், 35வது பீடாதிபதி ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த மகா சுவாமி, உத்திராதிகாரியான ஸ்ரீபாரதீ தீர்த்த மஹா சுவாமியுடன் இணைந்து, 1985ம் ஆண்டில் மஹா கும்பாபிஷேகம் நடத்தினார்.தற்போதைய பீடாதிபதி ஸ்ரீபாரதி தீர்த்த மஹா சன்னிதானம், ஸ்ரீமலஹானிகரேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தை நிர்மாணித்து, வரும், 12ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ளார்.
பீடாதிபதியின் உத்தராதிகாரி சீடரான ஸ்ரீவிதுசேகர பாரதி மஹா சன்னிதானம் இணைந்து, ஸ்ரீபவானி மலஹானிகரேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நிகழ்த்த உள்ளார்.விமரிசையான நிகழ்ச்சிகள்சிருங்கேரி மடத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கவுரிசங்கர் கூறியதாவது:உலக நன்மைக்காக, லக் ஷ மோதக மஹா கணபதி ஹோமம், அதிருத்திர மஹா யாகம், சதுர்வேத பாராயணம், 18 புராணங்களின் பாராயணம், பஞ்சாக்ரீ ஸ்ரீவித்யா முதலான ஜப ஹோமங்கள்
உள்ளிட்ட ஹோம பூஜைகள் நடக்க உள்ளன.இன்று, மஹா கணபதி ஹோமத்துடன் விழா துவங்குகிறது. வரும், 12ம் தேதி காலை, 7:00 மணிக்கு, மஹா சுவாமிகளால், மூலாதார மூர்த்திகள் மற்றும் ராஜகோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நிகழ
உள்ளது.அதன் பின், 15ம் தேதி மஹா உற்சவ கொடியேற்றம், 18ம் தேதி மஹா சிவராத்திரி பூஜைகள், 20ம் தேதி தேரோட்டம், 21ம் தேதி தெப்ப உற்சவம் நடைபெறும்.பஞ்சமி முதல் அமாவாசை வரை, காலை, 7:30 மணிக்கு, மஹா சந்யாச பூர்வக ருத்திர அபிஷேகமும், மஹா தீபாராதனையும் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X